tamilnadu

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

‘மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஓட்டு போடாதீங்க..’
அய்யாக்கண்ணு

பிரதமர் மோடி எல்லா விவசாயிகளுக்கும் மாதம் ரூ. 500 உதவித் தொகை வழங்கப்படும் என்று  அறிவித்தார். அந்த தொகை யே குறைவுதான். ஆனால் அறிவித்த தொகையும் விவ சாயிகள் அனைவருக்கும் கிடைக்கவில்லை. விவசாயி களுக்கு எல்லா உதவியும் செய்யப்படும் என தெரி வித்தார்கள், லாபகரமான விலை கிடைக்கும் என  கூறினார்கள். ஆனால் குறைந்தபட்ச ஆதார விலை கூட கிடைப்பதில்லை.

தில்லியில் போராட்டம் நடத்திய விவசாயிகள் மீது கண்ணீர் புகைகுண்டு வீசுகிறார்கள். இதில்  ஒரு விவசாயி இறந்துள்ளார். சர்வாதிகார நாடு களைபோல் விவசாயிகளை நடத்துகிறார்கள்.

இந்த தேர்தலில் மின்னணு வாக்கு இயந்தி ரத்தில் கோளாறு செய்து, பணம் கொடுத்து ஓட்டு வாங்கலாம் என்று பிரதமர் மோடி நினைத்துக் கொண்டிருக்கிறார். யாருக்கு வேண்டுமானாலும் ஓட்டு போடுங்கள், மோடிக்கு மட்டும் ஓட்டுப் போடாதீர்கள்.

அமலுக்கு வந்தன 
நடத்தை விதிகள் 

மக்களவைத் தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் சனிக்கிழமை பிற் பகல் 3 மணிக்கு அறிவித்தது. அதைத் தொடர்ந்து, தமிழ்நாடு உட்பட நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன.

முதல்கட்டமாக சென்னை தலைமைச் செயல கத்தில் வைக்கப்பட்டுள்ள முதல்வர், அமைச்சர் கள் படங்கள் மற்றும் அரசின் சாதனை விளக்க  படங்களை ஊழியர்கள் அகற்றினர். அமைச் சர்களின் அலுவலகங்களில் இருந்த முதல்வர் உள்ளிட்ட படங்கள் அகற்றப்பட்டன.

மாநிலம் முழுவதும் மாநகராட்சி அலுவல கங்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் முதல்வர், அமைச்சர்கள் உருவம் பதிக்கப்பட்ட  விளம்பரங்கள், அறிவிப்புகள் அகற்றப்பட்டுள் ளன. சுவர் விளம்பரங்களை அழிப்பது, சுவ ரொட்டிகளை அகற்றுவது உள்ளிட்ட பணிகள் உட னடியாக துவங்கின.

அதேபோல் சட்டப்பேரவை, மக்களவை உறுப்பினர்களின் அலுவலகங்கள் தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளன. ஒன்றிய, மாநில அரசு அலுவல கங்களில் பிரதமர், முதல்வர், அமைச்சர்கள் உள்  ளிட்டவர்களின் புகைப்படங்கள் அல்லது அவர்கள்  புகைப்படங்களுடன் கூடிய காலண்டர்கள் அகற்றப்பட்டு வருகின்றன.

விடிய விடிய வாகன சோதனை
மக்களவைத் தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்  பதை முற்றிலுமாக தடுக்க தீவிர கண்கா ணிப்பு மற்றும் சோதனைகள் நடைபெறும் என்று  தேர்தல் ஆணையம் அறிவித்தது.

அதைத்தொடர்ந்து, தேர்தல் ஆணைய அதி காரிகள் மற்றும் அலுவலர்கள் தமிழ்நாட்டில் சோதனை பணியை தொடங்கினர். இதன் எதிரொலி யாக சென்னை உள்பட அனைத்து மாவட்டங்களி லும் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனை யில் ஈடுபட்டு வருகின்றனர்.

சென்னையில் 16 பறக்கும் படையினர்  சோதனை நடத்தி வருகிறார்கள். மாநிலம் முழு வதும் 702 பறக்கும் படையினர் இந்த சோதனை யில் ஈடுபட்டுள்ளனர். மாநிலத்தின் பல்வேறு பகுதி களிலும் விடிய விடிய சோதனை நடைபெறு கிறது.

கை சின்னத்திற்கு வாக்கு கேட்ட பாஜக நிர்வாகி
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியை அடுத்துள்ள ஆரணியில் பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்  பாட்டத்தில் பாஜக நிர்வாகி அத்திபட்டு துரைக்  கண்ணு கண்டன உரையாற்றினார். அப்போது அவர், “பெரிய திட்டங்களை செய்து கொடுத்த பிர தமர் மோடிக்கு தேர்தலில் “கை” சின்னத்தில் வாக்க ளியுங்கள் என்றார். அப்போது அருகிலிருந்த வர்கள் “தாமரை சின்னம்” என்பதை சுட்டிக் காட்டினர். விசாரித்ததில், அவர் காங்கிரஸ் கட்சி யிலிருந்து சமீபத்தில் பாஜகவில் கரைந்துள்ளார்; பழக்க தோஷத்தில் அப்படிப் பேசிவிட்டார் என்ற னர்.