tamilnadu

img

மாநகர பேருந்துகளை தனியார்மயமாக்காதே! பல்லவன் இல்லம் முன்பு வாலிபர்கள் ஆர்ப்பாட்டம்

மாநகர பேருந்துகளை தனியார்மயமாக்காதே!
பல்லவன் இல்லம் முன்பு வாலிபர்கள் ஆர்ப்பாட்டம்

அரசுப் பேருந்துகளை தனியார்மய மாக்க எதிர்ப்பு தெரிவித்து புதனன்று (பிப்.26) பல்லவன் இல்லம் முன்பு  வாலிபர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஜெர்மன் வங்கியில் கடனுதவியுடன் மாநகர போக்குவரத்துக் கழகம் புதி தாக 600 மின்சாரப் பேருந்துகளை கொள்முதல் செய்ய உள்ளது. இந்தப் பேருந்துகளை தனியார் மூலம் இயக்கி, பராமரிக்க போக்குவரத்துக் கழகம் ஒப்பந்தம் கோரியுள்ளது. பேருந்துகளை நிறுத்துவதற்கான இடத்தையும் கொடுத்து, தனியாருக்கு நட்டம் ஏற்பட்டால் அதனை கழகமே ஈடு செய்யும் என்ற வகையில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்கு போக்குவரத்து கழகத்தில் செயல்படும் சிஐடியு உள்ளிட்ட பல்வேறு அமைப்பு கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. அரசுப் பேருந்துகளை தனியார்மய மாக்கும் முடிவை கைவிட வேண்டும், ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும்,  அவுட்சோர்சிங் முறையை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக் கைகளை வலியுறுத்தி பல்லவன் இல்லம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது செய்தியாளர்களிடம் சங்கத்தின் மாநிலத் தலைவர் எஸ்.கார்த்திக் கூறியதாவது: மாநகர போக்குவரத்துக் கழகம் சென்னையில் சுமார் 3500 பேருந்து களை இயக்குகிறது. 31 லட்சம் பேர்  பயணிக்கின்றனர்.

பழைய பேருந்து களை மாற்றி புதிய பேருந்துகளை இயக்க மக்கள் கோருகின்றனர். ஆனால் அரசு, 600 பேருந்துகளை வாங்கி தனியார் மூலம் இயக்க முயற் சிக்கிறது. இதனால் பல லட்சம் பேர் தனியார் பேருந்துகளை பயன்படுத்த வேண்டி நிலை ஏற்படும். அந்தப்  பேருந்துகளில் மகளிர், மாணவர்,  மாற்றுத்திறனாளிகள், முதியோருக் கான கட்டண, இலவச பயணம் ரத்து செய்யப்படும். மேலும், 600 பேருந்துகளுக்கான ஓட்டுநர், நடத்துநர், தொழில்நுட்ப ஊழியர்கள் என 2 ஆயிரம் பணியிடங் கள் தனியார்மயமாகும். இடஒதுக்கீடு பறிபோகும். சென்னையை தொடர்ந்து தமிழகம் முழுவதும் இந்த திட்டத்தை அமல்படுத்த திட்டமிட்டுள்ளனர். எனவே, அரசுப் பேருந்துகளை தனி யாரிடம் ஒப்படைப்பதை ஏற்க மாட்டோம். ஒப்பந்தம் கோரியுள்ளதை மார்ச் 10ந் தேதிக்குள் கைவிட மறுத் தால், மறியல் உள்ளிட்ட போராட்டங் களை நடத்துவோம். இவ்வாறு அவர் கூறினார். இந்தப் போராட்டத்தில் எம்.ஆர்.சுரேஷ், தீ.சந்துரு (தென்சென்னை), கே.மணிகண்டன், லோ.விக்னேஷ் (மத்திய சென்னை), நித்திய ராஜ், அபிராமி (வடசென்னை) உள்ளிட்டோர் பேசினர்.