tamilnadu

img

மே.வங்கத்தில் மருத்துவர்கள் மீண்டும் போராட்டம் மருத்துவ சேவைகள் பாதிப்பு

மேற்குவங்கத்தில் பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் பலாத் கார, கொலை வழக்கில் நீதி கேட்டு இளநிலை மருத்துவர்கள் மீண் டும் போராட்டத்தை தொடங்கி உள்ள தால் மருத்துவ சேவை கள் பாதிக்கப்பட்டுள் ளன. 

மேற்குவங்க மாநிலம் கொல்கத்தா வில் உள்ள ஆர்ஜி கர் அரசு மருத் துவமனை மற்றும் மருத்துவ கல்லூரியில் பயிற்சி மருத்துவராக இருந்த பெண் கடந்த மாதம் 9 ஆம் தேதி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டார். நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திய இந்த சம்ப வம் தொடர்பாக கொல்கத்தா உயர் நீதிமன்ற உத்தரவுப்படி சிபிஐ விசாரித்து வருகிறது. மேலும் இந்த வழக்கை உச்ச நீதிமன்றமும் தாமாக முன்வந்து விசாரணை நடத்தி வருகிறது.

இதனிடையே பெண் மருத்துவரின் மரணத்துக்கு நீதி கேட்டு இளநிலை மருத்துவர்கள் போராட்டங்களில் ஈடு பட்டனர். அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த முதல்வர் மம்தா பானர்ஜி எடுத்த நடவடிக்கைகள் பலனளிக்கவில்லை. தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட மருத் துவர்களுடன் மாநில அரசு செய்து கொண்ட உடன்பாட்டையடுத்து கடந்த செப்டம்பர் 21ம் தேதி இளநிலை மருத்து வர்கள் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்பினர். அத்தியாவசிய மற்றும் அவசர சிகிச்சைகளை மட்டும் செய்து வந்த அவர்கள், புறநோயாளிகள் சிகிச்சை பிரிவில் பணியாற்றவில்லை.

இந்நிலையில் இளநிலை மருத்து வர்கள் மீண்டும் காலவரையற்ற முழு வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கி யுள்ளனர். இதனால் மருத்துவ சேவைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. பெண் மருத்துவர் பாலியல் பலாத்கார, கொலை விவகாரத்தில் குற்றவாளிகளை வழக் கில் இருந்து தப்பிக்க வைக்கும் நோக் கத்துடன் சிபிஐ விசாரணை மெதுவாக இருப்பது ஏமாற்றம் அளிப்பதாக போராட் டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள் கூறு கின்றனர்.