tamilnadu

img

தாம்பரம் சிட்லபாக்கம் பகுதிகளுக்கு விநியோகம் செய்யப்பட்ட தண்ணீர் பயன்படுத்த தகுதியற்றது ஏன்?

தாம்பரம் குடியிருப்பு வாசிகள், தங்களது வீடுகளுக்கு விநியோ கம் செய்யப்படும் குடிநீரில் மனிதர்கள் கால்நடைகள் மற்றும் வனவிலங்குகளின் மலத்தில் இருந்து உருவாகும் பாக்டீரியாக் கள் இருப்பதாக புகார் தெரிவித்தனர். குடிநீரில் இத்தகைய கழிவுகள் இருக்கக் கூடாது என்பதுதான் மத்திய மாசுகட்டுப் பாட்டு வாரிய தரநிலைகளில் ஒன்றாகும். ஆனால் அதற்கு எதிராக ஏரி தண்ணீரில் கழிவுகளின் அளவு இருப்பதாக பொதுமக்கள் கவலை தெரிவித்தனர். இதனால் தாம்பரம், சிட்லபாக்கம்  பகுதி மக்களுக்கு குடிநீர் வழங்கும் ஆதாரங்களில் ஒன்றான மாடம்பாக்கம் ஏரியில் கழிவு நீர்கலப்பது உறுதியாகியுள்ளது. கால்நடைகளின் கழிவுகளில் காணப்படும் ஒரு வகை பாக்டீரியா இந்த ஏரியின் தண்ணீ ரில் இருப்பது தெரியவந்துள்ளது.

கடந்த பிப்ரவரி மாதம் வரை சிட்லபாக்கம்,  செம்பாக்கம், மாடம்பாக்கம் பகுதியை சேர்ந்த 3300 குடியிருப்பு வாசிகள் மாடம்பாக்கம் ஏரியில் இருந்து நாள் ஒன்றுக்கு 16 லட்சம் லிட்டர் தண்ணீரை பெற்று வந்தனர். மாநகராட்சி புள்ளிவிவரப்படி இந்த ஏரியில் சட்டவிரோதமாக 13 இடங்களில் கழிவுநீர் விடப்படுகிறது. அது வீடுகளில் இருந்து திறந்துவிடப்படும் கழிவுநீராக இருக்கலாம். அல்லது கடைகள், வர்த்தக நிறுவனங்களில் இருந்து திறந்துவிடப்படும் கழிவுநீராக இருக்கலாம். 

மாடம்பாக்கம் ஏரிக்குள் குடிநீருக்காக 5 கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளன. அதிலிருந்து தண்ணீர் எடுத்து வடிகட்டி குளோரின் சேர்த்து உள்ளாட்சி அமைப்பு கள் மூலமாக வீடுகளுக்கு குடிநீர் விநியோ கம் செய்யப்படுகிறது. இந்த  தண்ணீர் அசுத்த மாக இருப்பதாக பொதுமக்கள் தெரிவித்ததை யடுத்து மாநில மாசுகட்டுப்பாட்டு வாரியம் 2023 ஆண்டு அக்டோபர் முதல் 2024 ஆம்  ஆண்டு ஜூன்வரை ஏரி தண்ணீரை பரிசோதித்து  பார்த்தது. அதில் மனிதர்கள் மற்றும் கால்நடைகளின் கழிவுகளில் இருந்து உருவா கும் பாக்டீரியாக்கள் அளவுக்கு அதிகமாக இருப்பது தெரியவந்துள்ளது என பிரபல ஆங்கில நாளேடு செய்தி வெளியிட்டது. ஆனால் உள்ளாட்சி அமைப்புகள் இந்த குற்றச்சாட்டை மறுத்தன. கடந்தாண்டு நவம்பர் மாதம் தமிழ்நாடு குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் வாரியத்தின் ஆய்வகத்தில் நடத்தப்பட்ட பரிசோதனையில் மனித மற்றும் கால்நடை கழிவுகள் இல்லை என தெரியவந்ததாக உள்ளாட்சி அமைப்புகள் கூறுகின்றன.

ஆனால் இந்த கூற்றை பொதுமக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.  தேசிய பசுமை  தீர்ப்பாய தென்மண்டல அமர்வு தாமாக  முன்வந்து இந்த பிரச்சனையை விசாரணைக்கு  எடுத்துக்கொண்டது. பின்னர் சென்னை மாசுகட்டுப்பாட்டு வாரியம் (சிபிசிபி) மற்றும்  தமிழ்நாடு மாசுகட்டுப்பாட்டு வாரியம் (டிஎன்பி சிபி) ஆகியவை ஏரியில் இருந்து குடிநீர் தேவைக்காக எடுக்கப்படும் தண்ணீரை பரிசோதிக்கவேண்டும் என உத்தரவிட்டது.
கடந்தாண்டு நவம்பர் மாதம் 14 ஆம் தேதி ஏரியில் இருந்து தண்ணீர் எடுத்து மறுநாள் பரிசோதித்து பார்க்கப்பட்டது. இதனால் குடிநீர்வாரிய சோதனையின் முடிவுகளுக்கும் சென்னை மாசுகட்டுப்பாட்டு வாரிய வழிகாட்டுதல்களுக்கும் மிகப்பெரிய வேறுபாடு இருப்பதாக தெரிய வந்துள்ளது. மாசுகட்டுப்பாட்டு வாரிய வழிகாட்டு நெறிமுறைகளின் படி ஒரு ஏரியில் இருந்து எடுக்கப்படும் தண்ணீரில் மனித மற்றும் கால்நடைகளின் கழிவுகள் இருப்பதாக பரிசோதனையில் தெரியவர நான்கு நாட்கள் ஆகுமாம். ஆனால் மறுநாளே பரிசோதனை முடிவுகளை குடிநீர் வாரியம் எப்படி வெளி யிட்டது என பொதுமக்கள் கேள்வி எழுப்புகிறார்கள்.

கடந்த மார்ச் மாதம் இதுகுறித்த வழக்கு  சென்னை உயர்நீதிமன்றத்தில் வந்தபோது  மாடம்பாக்கம் ஏரி தண்ணீர் மாசு அடைய வில்லை என்றும் குடியிருப்பு வாசிகளுக்கு ஏரியில் இருந்து நேரடியாக தண்ணீர் எடுக்கப் படவில்லை என்றும் ஏரியின் கரைகளில் போடப்பட்டுள்ள கிணறுகளில் இருந்துதான் தண்ணீர் எடுக்கப்படுவதாகவும் மாநகராட்சி சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. ஆனால் கடந்த மாதம்  ஏரியின் வடமேற்கு பகுதியில் யஷ்வந்த் நகரையொட்டியுள்ள கிணற்றில் இருந்து சென்னை மாசுகட்டுப்பாட்டு வாரியம் தண்ணீர் எடுத்து பரிசோதித்து பார்த்ததில் கழிவுகள் இருந்தது உறுதியானது.

இதற்கு காரணம் ஏரியையொட்டியுள்ள சில வீடுகள் கடைகள் வர்த்தக நிறுவனங்களில் இருந்து கழிவுநீர் சுத்திகரிக்கப்படாமல் நேரடியாக ஏரிக்குள் விடப்படுவதால் ஏரியின் தண்ணீர் குடிநீருக்கு பயன்படுத்தமுடியாத அளவுக்கு மாசடைந்துள்ளது. கழிவுகள் நிலத்தடி நீரில் சேர்ந்து அதையும் மாசு படுத்திவிட்டது. மேலும் இத்தகைய பாக்டீரி யாக்களை தடுக்கும் அளவுக்கு மண்ணில்  இருக்கவேண்டிய நுண்ணுயிர் பன்முகத் தன்மையும் இந்த ஏரியில் மிகமிக குறைவாக உள்ளது. இதனால் மனிதர்கள் மற்றும் கால்நடைகளின் கழிவுகள் எளிதாக நிலத்தடி நீரில்கலந்து அதையும் மாசுபடுத்திவிட்டது.

எனவே இந்த ஏரியின் தண்ணீர் மற்றும்  நிலத்தடி நீரில் உள்ள பாக்டீரியா எந்தவகையை சேர்ந்தது, அதனால் ஏற்படும்  பாதிப்புகள் என்ன என்பது குறித்து தண்ணீரை  மேலும் பரிசோதிக்கவேண்டும் என்று  சென்னை ஐஐடியின் உயிரி தொழில்நுட்ப வியல் துறையின் பேராசிரியர் ராம வைத்ய நாதன் கூறினார். கழிவுநீர் சுத்திகரிப்பு ஏற்பாடு கள் தேவைப்படுகிறது. மேலும்  குளோரின் கலப்பு ஓரளவு தண்ணீரை பாதுகாக்க உத வும் என்றாலும் அதிகப்படியான குளோரின் கலப்பு தவிர்க்கப்படவேண்டும் என்றும் அவர்  கூறுகிறார்.

கடந்தாண்டு அக்டோபர் மாதம் மாநில நீர்வள ஆதாரதுறை தாம்பரம் நகராட்சிக்கு ஏரி நீர் மாசு அடைந்துள்ளது குறித்து விளக்கம்  கேட்டு நோட்டீஸ் அனுப்பியது. மேலும் ஏரியில் கழிவுநீர் கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்குமாறும் ஏரிக்குள் கழிவுநீரை திறந்து விடும் குடியிருப்புகள் மற்றும் வணிக நிறுவனங்களின் இணைப்புகளை துண்டிக்கு மாறும் அறிவுறுத்தியது. மேலும் ஏரியில் குவிந்துள்ள குப்பைகளை அகற்றுமாறும் கேட்டுக்கொண்டது.

இதுகுறித்து தாம்பரம் மாநகராட்சி அதிகாரி ஒருவரிடம் ஆங்கில நாளிதழின் செய்தியாளர் ஒருவர் விளக்கம் கேட்க  தொடர்பு கொண்டபோது, மாநகராட்சிக்கு புதிய ஆணையர் இன்னும் பொறுப்பேற்க வில்லை. அந்த இடம் காலியாக உள்ளது. மாடம்பாக்கம் ஏரி தண்ணீர் மாசு அடைந்து விட்டது என்ற புகார்  வந்தவுடனே கடந்த பிப்ரவரி மாதம் முதல் அந்த தண்ணீர் விநியோ கத்தை நிறுத்திவிட்டு பாலாறு தண்ணீரை விநியோகித்து  வருவதாக கூறினார்.

பாலாறு தண்ணீரும் சுத்தமாக இல்லை

தாம்பரம் குடியிருப்பு வாசிகளுக்கு பாலாறு தண்ணீர் விநியோகம் செய்யப் பட்டபோதிலும் அதன் பின்னரும் அம்மக்கள் திருப்தி அடையவில்லை. காரணம் அந்த தண்ணீரிலும் அதிகளவு மாசு இருப்பதுதான். அந்த தண்ணீரை கிங்ஸ் ஆராய்ச்சி நிறுவனம் பரிசோதனை செய்ததில் அதில் ரசாயனம் மற்றும் மனித கழிவுகளில் இருந்து உருவாகும் பாக்டீரியாக்கள் இருப்பது தெரியவந்துள்ளது.கடந்த ஏப்ரல் மாதம் பாலாற்றில் இருந்து தண்ணீர் உறிஞ்சப்படும் கடப்பேரி பகுதியிலும் சிட்டலபாக்கம் பழைய ஊராட்சி அலுவலகத்தில் உள்ள தண்ணீர்  குழாயிலும்  நடத்தப்பட்ட பரிசோதனையில் பாலாறு தண்ணீரில் அளவுக்கு அதிகமாக கழிவுகள் இருப்பது தெரியவந்தது. எனவே தாம்பரம் மக்களுக்கு நெம்மேலியில் புதிதாக  அமைக்கப்பட்டுள்ள கடல்நீரை சுத்திகரிக்கும்  ஆலையில் இருந்து தண்ணீரை பெற்றுத்தரும் நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை பாலாறு தண்ணீர் தான்  கிடைத்துவருவதாக சிட்லபாக்கத்தை சேர்ந்த தயானந்த் கிருஷ்ணன் தெரிவித்தார்.

தொகுப்பு: அ.விஜயகுமார்

ஃபீகல் கோலிஃபார்ம் பாக்டீரியா என்றால் என்ன?

ஃபீகல் கோலிஃபார்ம் பாக்டீரியா என்பது மனிதர்கள், கால்நடைகள் மற்றும் வனவிலங்குகளின் மலத்தில் இருந்து உருவாகும் பாக்டீரியாக்களின் குழுவாகும். வளர்ச்சிக்கு ஏற்ற சூழ்நிலைகள் இருந்தால் பாக்டீரியாக்கள் வேகமாக இனப்பெருக்கம் செய்யும்.  பெரும்பாலான பாக்டீரியாக்கள் இருண்ட,சூடான, ஈரமான சூழலில்  வேகமாக வளரும். இந்த பாக்டீரி யாக்கள்  உள்ள தண்ணீரை பயன்படுத்தும்போது அது  வாந்தி,  வயிற்றுப்போக்கு உள்பட பல்வேறு உடல்நல பாதிப்புகளை ஏற்படுத்தும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

மாடம்பாக்கம் ஏரி ஒரு பார்வை

சுற்றளவு                                                             259, 11ஏக்கர்

கொள்ளவு                                                         15 கோடியே 15  லட்சம் கன அடி
கழிவுநீர் கலக்கும் இடங்கள்                       13  
2024 பிப்ரவரி வரை விநியோகம் செய்யப்பட்ட தண்ணீரின் அளவு         15 லட்சம்  லிட்டர் முதல் 16 லட்சம் லிட்டர் தண்ணீர் வரை

 
2024 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஏரி தண்ணீரில் கழிவுகள் இருப்பதை சென்னை மாசு கட்டுப்பாட்டு வாரியம் உறுதிசெய்தபோது இருந்த அளவு: 10 கோடி லிட்டர் தண்ணீரில் 540 என்பிஎம்.

( பத்து லட்சம் லிட்டர் குடிநீரில் பூஜ்ய அளவு என்பிஎம் கழிவுகள் இருப்பது மனித மற்றும் கால்நடை கழிவுகள் குறித்த சென்னை மாசுகட்டுப்பாட்டு வாரிய வழிகாட்டு நெறிமுறைகளின் படி ஏற்றுகொள்ளக் கூடியதே.)

மாடம்பாக்கம் ஏரியில் இருந்து குடிநீர் விநியோகம் ஏப்படி?

2019 ஜூன் :  சிட்டலபாக்கம் ஊராட்சி நிர்வாகம் 3 கோடி ரூபாய் செலவில் குடிநீர் விநியோகத்திற்கான  பணிகளை தொடங்கியது. இதற்காக மாடம்பாக்கம் ஏரி படுகையில் ஐந்து பெரிய கிணறுகள் தோண்டப்பட்டன. நிலத்தடி குடிநீர் தொட்டியும், 2லட்சம்  லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் தொட்டிகளும் கட்டப்பட்டன.
குடிநீர் விநியோகம் செய்யப்படும் முன் வடிகட்டுதல் மற்றும் குளோரின் கலப்பு மேற்கொள்ளப்படும்.
2023 அக்டோபர்:   மாடம்பாக்கம் குடியிருப்பு வாசிகள் பொது குழாய்களில் வந்த மாடம்பாக்கம் ஏரி தண்ணீரை எடுத்து  தனியார் ஆய்வகத்தில் பரிசோதனைக்கு அளித்தனர். அப்போது அதில் மனித மற்றும் கால்நடை கழிவுகள் கலந்திருப்பது தெரியவந்தது. 
சுத்திகரிக்கப்படாத கழிவுநீரை ஏரியில் வீடும் குடியிருப்புகள் வர்த்தக நிறுவனங்களை கண்டறிந்து கழிவுநீர் வரும் வழிகளை மூடுமாறு மாநகராட்சிக்கு நீர்வள ஆதாரத்துறை அறிவுறுத்தியது
தமிழ்நாடு மாசுகட்டுப்பாட்டு வாரியம் ஏரி தண்ணீரை ஆய்வுசெய்து அதில் மனித மற்றும் கால்நடை கழிவுகள் இருப்பதை உறுதிசெய்தது. 
2023 நவம்பர் : தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் 2023 நவம்பர் மாதம் சிட்டலபாக்கத்தில் உள்ள மேல் நிலை குடிநீர் நீர்தேக்க தொட்டியில் சோதனை செய்து அதில் மனிதமற்றும் கால்நடை கழிவுகள் இல்லை என்று கூறியது.  குடிநீர்வாரிய பரிசோதனை அறிக்கையின் படி ஏரி தண்ணீர் பயன்படுத்த தகுதியானது என்று மாநகராட்சி தெரிவித்தது.
 தேசிய பசுமை தீர்ப்பாய முதன்மை அமர்வு இந்த பிரச்சனையை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்கொண்டது. மாடம்பாக்கம் ஏரியில் மனித மற்றும் கால்நடை கழிவுகள் கலப்பு குறித்து  பரிசோதிக்குமாறு சென்னை மாசுகட்டுப்பாட்டு வாரியம் மற்றும் தமிழ்நாடு மாசுகட்டுப்பாட்டு வாரியத்தை கேட்டுக்கொண்டது.
 ஜனவரி 2024 : ஏரிதண்ணீரில் கழிவு கலப்பு குறித்து பொது நலன் கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவுக்கு பதில் அளிக்குமாறு கடந்த ஜனவரி மாதம் தமிழ்நாடு மாசுகட்டுப்பாட்டு வாரியத்திற்கும், மாநகராட்சிக்கும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. 
2024 பிப்ரவரி : மாடம்பாக்கம் ஏரியில் இருந்து தண்ணீர் விநியோகம் நிறுத்தப்பட்டது. மாற்று ஏற்படாக சிட்லபாக்கம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளுக்கு பாலாறு ஏரியில் இருந்து 80 லட்சம் லிட்டர் தண்ணீர் நாள் ஒன்றுக்கு விநியோகம் செய்யப்பட்டது.
2024 மார்ச் : ஏரியை சீரமைக்கும் பணிகள் தொடங்கின. ஏரி தூர் வாரப்பட்டு ஏரியில் இருந்து தண்ணீரை மக்களுக்கு விநியோகம் செய்வதற்கு முன்பு  வடிகட்டி, குளோரின் சேர்த்து விநியோகம் செய்ய முடிவு செய்யப்பட்டது. இதனால் ஏரிதண்ணீர் குடிக்க உகந்ததுதான் என பொதுமக்கள் மனதில் நம்பகத்தன்மையை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. மேலும் உயர்நீதிமன்றத்தில் உள்ள மனுவுக்கு மாநகராட்சி தரப்பில் பதில் மனுவும் தாக்கல் செய்யப்பட்டது.
2024 ஏப்ரல்: சிட்லப்பாக்கம் மக்களுக்கு விநியோகம் செய்யப்பட்ட பாலாறு தண்ணீரை நிலத்தடிநீர் தொட்டி மற்றும் பஞ்சாயத்து அலுவலகத்தில் உள்ள குழாயில் இருந்து மாதிரி சேகரிக்கப்பட்டு கிண்டி கிங்ஸ் இன்ஸ்டியூட் பரிசோதனை கூட ஆய்வுக்கு அனுப்பட்டது. அதில் பாலாறு தண்ணீரிலும் அளவுக்கு அதிகமாக மனித மற்றும் கால்நடை கழிவுகள் இருப்பது தெரியவந்தது. 
2024 ஜூன் மாதம் : மாடம்பாக்கம் ஏரியில் மனித மற்றும் கால்நடை கழிவுகள் கலந்திருப்பது சென்னை மாசுகட்டுப்பாட்டு வாரிய  ஆய்விலும் உறுதிப்படுத்தப்பட்டது.