tamilnadu

img

ரூ. 1,000 ரொக்கத்துடன், பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம்!

சென்னை, ஜன. 10 - 2024-ஆம் ஆண்டு பொங்கல் திருநாளை முன்னிட்டு, தமிழ்நாட்டிலுள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ. 1,000 ரொக்கத்துடன், ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழுக்கரும்பு, வேட்டி  - சேலை உள்ளிட்ட பரிசுத் தொகுப்பு வழங்கப் படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறி வித்திருந்தார்.

இந்த பரிசுத் தொகுப்பை பெறுவதற்கு பொதுமக்கள் ரேசன் கடைகளில் கூட்ட மாக கூடி விடக்கூடாது என்பதற்காக டோக்க னும் வழங்கப்பட்டது. டோக்கனில் குறிப் பிட்ட தேதியில் வந்து பொதுமக்கள் ரூ. 1000  ரொக்கப்பணம் மற்றும் பொங்கல் தொகுப்பை பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில், பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் திட்டத்தை சென்னை ஆழ்வார்பேட்டை ஸ்ரீராம் நகரில் உள்ள ரேசன் கடையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் புதனன்று தொடங்கி வைத்தார். அதேபோல தமிழ்நாடு முழுவதும் ரேசன் கடைகளில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணி தொடங்கியது.

ஆளுநரைக் கண்டித்து மாணவர்கள் இன்று போராட்டம்

சேலம், ஜன. 10- சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் ஊழல் துணைவேந்தர் ஜெகநாதனை பாதுகாக்க முயலும் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியைக் கண்டித்து தமிழ்நாடு மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் வியாழனன்று மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. ஊழல் வழக்கில் சாட்சியங்களை கலைக்கும் திட்டத்துடன் சேலம் வரும் ஆர்.என்.ரவியை பெரியார் பல்கலைக்கழகத்திற்குள் நுழையவிடமாட்டோம் என்று மாணவர்கள் கூட்டமைப்பினர் அறிவித்துள்ளனர்.