போக்குவரத்து பணிமனையை மத்திய சென்னைக்கு மாற்றுவதை கைவிடுக மாற்றுத்திறனாளிகள் சங்கம் அரசுக்கு கோரிக்கை
சென்னை, ஜூன் 1- மக்கள் பயன்பாட்டில் கடந்த 50 ஆண்டு காலமாக இயங்கிவந்த போக்குவரத்து பணிமனையை மத்திய சென்னைக்கு மாற்றுவதை கைவிட வேண்டும் என மாற்றுத்திறனாளிகள் சங்கம் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது. தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் திருவொற்றி யூர் - எண்ணூர் 4ஆவது பகுதி மாநாடு எஸ்.ராஜேந்திரன் தலைமையில் நடை பெற்றது. வழக்கறிஞர் அண்ணாமலை சங்கக் கொடியை ஏற்றினார். அசோக்குமார் அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார். மாவட்டத் தலைவர் ஆர்.ஜெயச்சந்திரன் மாநாட்டை துவக்கி வைத்து பேசினார். செயலாளர் ஆர்.செல்வகுமாரி வேலை அறிக்கையையும், பொருளாளர் எம்.ஆதி கேசவன் வரவு செலவு அறிக்கையையும் சமர்ப்பித்தனர். குமரன் சிறப்பு பள்ளி செந்தமிழ் செல்வி வாழ்த்திப் பேசினார். மாவட்டச் செயலாளர் எஸ்.ராணி மாநாட்டை நிறைவு செய்து பேசினார். தீர்மானங்கள் மாற்றுத்திறனாளிகள் அனைவருக்கும் நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தில் தரை தளத்தில் வீடு வழங்க வேண்டும், வட்டாட்சியர் அலுவலகத்தில் உதவித் தொகை கேட்டு பதிவு செய்து ஒரு வரு டத்திற்கும் மேலாக காத்திருக்கும் அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் உடனடியாக உதவித்தொகை வழங்க வேண்டும், பகுதி வாரியாக மாற்றுத் திறனாளிகள் மாதாந்திர சிறப்பு கூட்டங்கள் நடத்த வேண்டும், முறையாக அளவீடு செய்து உரிய மருத்துவ சான்றிதழ் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நிர்வாகிகள் தேர்வு தலைவராக திருமணிச்செல்வன், செயலாளராக ஆர்.செல்வகுமாரி, பொரு ளாளராக எம்.ஆதிகேசவன் உள்ளிட்ட 17 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.