தவறவிட்ட செல்போனை ஒப்படைத்த மாற்றுத்திறனாளி
செங்கல்பட்டு, ஜூன் 27- செங்கல்பட்டு அருகே அரசு பேருந்தில் கீழே தவறவிட்ட செல்போனை பார்வையற்ற சட்டக் கல்லூரி மாணவர் எடுத்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த மேல்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் பிரபாகரன் (35). பார்வை மாற்றுத்திறனாளியான இவர் செங்கல்பட்டு அரசு சட்டக் கல்லூரியில் 3ஆம் ஆண்டு சட்டம் பயின்று வருகிறார். இவர் திண்டிவனத்தில் இருந்து அரசு பேருந்து மூலமாக செங்கல்பட்டு ஐயப்பன் கோவில் பகுதிக்கு வந்தடைந்து அங்கிருந்து ஆட்டோ மூலமாக தினம்தோறும் சட்டக்கல்லூரிக்கு சென்று வருகிறார். இந்நிலையில் வழக்கம் போல வியாழனன்று (ஜூன் 26) காலை திண்டிவனத்தில் இருந்து அரசு பேருந்து மூலமாக செங்கல்பட்டு வந்தபோது பேருந்தில் யாரோ தவற விட்ட செல்போனை எடுத்துள்ளார். தொடர்ந்து செங்கல்பட்டு நகர காவல் நிலையம் வந்தடைந்த பிரபாகரன் காவல் நிலையத்தில் செல்போனை ஒப்படைத்தார். தொடர்ந்து அவரிடம் செல்போனை பெற்றுக்கொண்ட காவலர்கள் அவரை பாராட்டியதுடன் அதனை உரியவரிடம் ஒப்படைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கண் தெரியாத சட்டக் கல்லூரி மாணவர் பேருந்தில் கிடந்த விலை உயர்ந்த செல்போனை ஒப்படைத்த சம்பவம் நிகழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.