சென்னை, நவ.26- போக்குவரத்துக் கழகங்களின் வரவுக்கும் செலவுக்குமான வித்தி யாசத் தொகையை வழங்க அரசு பரிசீலித்து வருவதாக போக்குவரத்து துறைச் செயலாளர் பனீந்திரரெட்டி, தொழிற்சங்கங்களிடம் தெரிவித்துள் ளார்.
அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக நவ.18 அன்று முதலமைச்சர், போக்குவரத்துத் துறை அமைச்சர், துறைச் செயலா ளர் ஆகியோரிடம் மனு அளிக்கப் பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து நவ.25 அன்று துறைச் செயலாளரை கூட்டமைப்பினர் சந்தித்துப் பேசினர். அப்போது, ஊதிய உயர்வு பேச்சுவார்த்தையை டிசம்பர் 2 ஆவது வாரத்திற்குள் நடத்த ஏற்பாடு செய்வ தாகவும், ஓய்வுபெற்ற ஊழியர் களுக்கு ஓய்வுக்கால பணப்பலன் களை 3 மாத கால அளவிற்கு வழங்கப் படும் என்று தெரிவித்துள்ளார்.
அப்போது, ஓய்வுக்கால பலனை முழுமையாக வழங்க வேண்டும். அகவிலைப்படி உயர்வு வழக்கில் நீதிமன்றம் தீர்ப்பளித்த பின்பும், மறு படியும் மேல்முறையீடு செய்வது சரி யல்ல. எனவே, அகவிலைப்படி உயர்வை வழங்க, கூட்டமைப்பினர் வலியுறுத்தி உள்ளனர்.
அதற்கு பதி லளித்த செயலாளர், அரசின் பண உதவி வந்த பிறகுதான் அகவிலைப் படி உயர்வு வழங்க முடியும். அதற் கான முயற்சிகளை மேற்கொள்வதாக தெரிவித்துள்ளார். கழகங்களில் உள்ள பணியிடங் களை முழுமையாக நிரப்பவேண்டும். ஓட்டுனர் மற்றும் நடத்துனர் என நிய மனம் செய்வதால் ஏற்படும் பாதிப்பு களை விளக்கிய கூட்டமைப்பினர், ஓட்டுநர், நடத்துநர் என தனித்தனி யாக நியமனம் செய்ய வேண்டும் என்றனர். இதுகுறித்த விவரங்களை தனி கடிதமாக தரும்படி கேட்டுக் கொண்டார்.
வாரிசு வேலைக்கு வரும் பெண் களுக்கு, உயரத்தை குறைக்க வேண்டுமென ஏற்கனவே பேசி ஒப்புக்கொள்ளப்பட்டது. இதுவரை அரசாணை பிறப்பிக்கப்படவில்லை என்பதை கூட்டமைப்பினர் சுட்டிக் கட்டியபோது, துறைச்செயலாளர் விரைந்து அரசாணை பிறப்பிக்கப் படும் என்று கூறியுள்ளார்.
தனியார் பேருந்துகளை வாட கைக்கு எடுத்து இயக்குவது, ஒப்பந்த முறையில் பணியாளர் நியமனம் போன்றவை சமூக நீதிக்கு எதிரானது என்பதால், இதனை கைவிடவேண்டும் போக்குவரத்துக் கழகங்களின் வரவுக் கும் செலவுக்குமான வித்தியாசத் தொகையை வழங்க வேண்டும் என்று கோரினர். அதற்கு பதிலளித்த செயலாளர், நிதி தொடர்பான கோப்பு அரசின் பரிசீலனையில் உள்ளது என்று தெரிவித்துள்ளார்.