tamilnadu

img

வெனிசுலா செல்ல சிபிஎம் எம்.பி.க்கு அனுமதி மறுப்பு ஜனநாயக மீறலாகும்

சென்னை,நவ.3- வெனிசுலாவில் நடைபெறும் பாசிச எதிர்ப்பு மாநாட்டில் பங்கேற்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எம்.பி.யை ஒன்றிய அரசு அனுமதிக்க வேண்டும் என்று மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர்  எம்.எச். ஜவா ஹிருல்லா எம்எல்ஏ., வலியுறுத்தியுள் ளார். இதுகுறித்து அவர் விடுத்தி ருக்கும் அறிக்கை வருமாறு: அதி கரிக்கும் பாசிசத் தாக்குதல்கள் குறித்து விவாதிக்க தென் அமெரிக்க நாடான வெனிசுலாவில் நடைபெறும் உலக நாடாளுமன்ற அமைப்பில் பங் கேற்க கேரளாவைச் சேர்ந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் டாக்டர் வி.சிவதாசனுக்கு மோடி அரசு அனு மதி மறுத்த உள்ளதாகத் தகவல்கள் வருகின்றன. மாநாட்டில் இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரை  பங்கேற்க விடாமல் தடுப்பது அப்பட்ட மான ஜனநாயக மீறலாகும்.

பாசிச எதிர்ப்பு என்கிற வார்த்தை  ஒன்றிய அரசுக்கு ஒவ்வாத ஒன்றாக தெரிகிறது போலும். காலம் தாழ்த்தாமல் சிபிஎம் நாடாளுமன்ற உறுப்பினர் சிவதாசனுக்கு அனுமதி யை வழங்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.