tamilnadu

img

குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்

குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பெற வேண்டும், தேசிய குடியுரிமை பதிவேட்டை ரத்து செய்ய வலியுறுத்தி சனிக்கிழமையன்று (டிச. 21) இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மூத்த தலைவர் ஆர்.நல்லக்கண்ணு தலைமையில் சின்னமலையிலிருந்து ஆளுநர் மாளிகையை முற்றுகையிட சென்றவர்களை போலீசார் தடுத்து கைது செய்தனர்.

***************

குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்தும், மாணவர்கள் மீது நடத்தப்படும் தாக்குதலை கண்டித்தும் அம்பேத்கர் சட்டக் கல்லூரி மாணவர்கள் சென்னை பாரிமுனையில் சனிக்கிழமை (டிச. 21) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

****************

குடியுரிமை சட்ட திருத்தத்தை எதிர்த்து அனைத்து கட்சி ஆர்ப்பாட்டம் மதுராந்தகம் பேருந்து நிலையம் எதிரில் நடைபெற்றது. சிபிஎம் வட்டச் செயலாளர் கே.வாசுதேவன் தலைமை தாங்கினார். சிபிஎம் மாவட்டக்குழு உறுப்பினர்கள் டி.கிருஷ்னராஜ், மாசிலாமணி, ராஜா, திமுக முன்னாள் நகர மன்ற உறுப்பினர் மலர்விழிக்குமார், தமுமுக நகரச் செயலாளர் அமானுல்லா, மமக நூர்முகமது, விசிக அப்பாதுரை, சிபிஐ ஏழுமலை, மதிமுக ராஜி, காங்கிரஸ் பாலசுப்பிரமணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.