ஓய்வூதியர்களுக்கு வழங்க வேண்டிய மருத்துவப் படியை உடனே வழங்க வேண்டும் என வலியுறுத்தி அகில இந்திய பிஎஸ்என்எல் ஓய்வூதியர் சங்கத்தின் சார்பில் புதுச்சேரி பிஎஸ்என்எல் தலைமை பொது மேலாளர் அலுவலகம் எதிரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் சக்திவேல் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் கொளஞ்சியப்பன், சுப்பிரமணியன் உட்பட பலர் பங்கேற்றனர்.