நியாய விலை கடைகளில் பருப்பு, பாமாயில், சர்க்கரை உள்ளிட்டபொருட்களை தடையின்றி மாதா மாதம் வழங்க வலியுறுத்தி அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில் ஆவடி காமராஜர் நகர் 10ஆவது தெருவில் உள்ள அமுதம் சிந்தாமணி நியாயவிலை கடை முன்பு பேச்சியம்மாள் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் புனித உதயகுமார் கஸ்தூரி, நிர்மலா ஆகியோர் பேசினர்.