‘இந்தியா’ கூட்டணி சார்பில் மத்திய சென்னை மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளராக தயாநிதி மாறன் மீண்டும் போட்டியிடுகிறார். இதனையொட்டி தோழமைக் கட்சித் தலைவர்கள் ஆலோசனைக் கூட்டம் வெள்ளியன்று (மார்ச் 22) ஆயிரம் விளக்கில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் வேட்பாளர் தயாநிதி மாறன் பேசினார். திமுக சென்னை மேற்கு மாவட்டச் செயலாளர் நே.சிற்றரசு, எழிலன் எம்எல்ஏ, எம்.கே.மோகன் எம்எல்ஏ, மாநகராட்சி ஆளும் கட்சி தலைவர் நா.ராமலிங்கம், சிபிஎம் மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் ஜி.செல்வா, சிபிஐ மாவட்டச் செயலாளர் பா.கருணாநிதி, காங்கிரஸ் கட்சியின் மத்திய சென்னை கிழக்கு மாவட்டத் தலைவர் சிவராஜசேகரன், விசிக மாவட்டச் செயலாளர்கள் மதிமுக மாவட்டச் செயலாளர்கள் சுப்பிரமணி எம்.சி., கழகக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.