tamilnadu

img

உளவுத்துறை ஐஜியாக டேவிட்சன் ஆசீர்வாதம் நியமனம்....

சென்னை:
சென்னை மாநகர காவல் ஆணையாளராக இருந்த மகேஷ்குமார் அகர்வால்உள்பட 3 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதற்கான உத்தரவை கூடுதல் தலைமை செயலாளர் பிரபாகர்  பிறப்பித்தார்.
அதன்படி சென்னை மாநகர காவல் ஆணையராக இருந்த மகேஷ்குமார் அகர்வால் இடமாற்றம் செய்யப்பட்டு அவருக்கு பதிலாக சங்கர் ஜூவால் நியமிக்கப்பட்டார். உளவுத்துறை ஏ.டி.ஜி.பி.யாக கோவை மாநகர காவல் ஆணையராக உள்ள டேவிட்சன் தேவாசீர்வாதம் நியமிக்கப் பட்டார். இவர் ஏற்கனவே மதுரை காவல் ஆணையராக பணியாற்றியவர். இதேபோல் சட்டம் ஒழுங்கு ஏடிஜிபியாக இருந்த ஜெயந்த் முரளி மாற்றப்பட்டு அவருக்கு பதிலாக தாமரைக்கண்ணன் நியமிக்கப்பட்டுள்ளார்.

;