இராமலிங்க வள்ளலார், சகஜானந்தர் பிறந்து வளர்ந்த மாவட்டம் தற்போ தைய கடலூர் மாவட்டத்தை உள்ளடக்கிய அப்போதைய தென்னாற்காடு மாவட்டம். இவர்கள் இருவரும் அவரவர் பாதையில் சாதி அமைப்பிற்கும், ஒடுக்குமுறைகளுக்கும் எதிராக தீவிரமாக போராடியவர்கள். இதனால் சாதிய சக்திகள் - பழமைவாதிகளின் எதிர்ப்பையும் கடும் ஆத்திரத்தையும் எதிர் கொண்டவர்கள். வள்ளலார் ஒரு ஆன்மீகவாதி. இவர் ஏற்படுத் திய சத்திய ஞான சபை அக்காலத்தில் பிரபல மானது. சாதி மத ஒடுக்குமுறைகளுக்கு எதிராக அக்காலத்திலேயே விரிவான நடைபயணம் மேற்கொண்டு பிரச்சாரம் செய்தவர். இதனால், சாதி வெறியர்களின் ஆத்திரம் இவர் மேல் பாய்ந்தது. 53ஆவது வயதில் எவரும் எதிர் பாராத சூழலில் திடீரென மரணமடைந்தார் வள்ளலார். உண்மையில் இவரது மரணம் மர்மமான ஒன்று. சகஜானந்தரை பொறுத்தவரை சாதி அமைப் பின் அடித்தட்டில் உள்ள தாழ்த்தப்பட்ட மக்க ளின் நலன்கள், உரிமைகளுக்காக வாழ்நாள் முழுவதும் குரல் கொடுத்து போராடியவர். இப்பணியை பிரதானப்படுத்தி அரசியலிலும் ஈடுபட்டார். அனைத்திந்திய ஆதி திராவிட மகா சபை சார்பாக 1926 முதல் 1932 வரை சென்னை மாகாண சட்ட மேலவை உறுப்பின ராக செயல்பட்டார். பின்னர் காங்கிரஸ் கட்சி யில் இணைந்து 1937 முதல் 1959 வரை சிதம் பரம் தொகுதியிலிருந்து சட்டப்பேரவை உறுப் பினராக தேர்வு செய்யப்பட்டு பணியாற்றினார். சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆலய நுழைவுப் போராட்டத்தை 1934இல் நடத்திய தால் சாதிய சக்திகளின் ஆத்திரத்திற்கு இரை யாகி கடுமையாக தாக்கப்பட்டார்.
இவர் மீதான தாக்குதலுக்கு எதிர்வினையாக மாவட்டம் முழுவதும் பல்வேறு சம்பவங்கள் நிகழ்ந்தன. தம்முயற்சியை அவர் கைவிடவில்லை. தொடர்ச்சியான இயக்கங்களையும், பிரச்சாரத் தையும் முன்னெடுத்தார். இறுதியாக, 1947இல் இவர் முன்னின்று நடத்திய நடராஜர் கோவில் ஆலய நுழைவுப் போராட்டம் வெற்றி பெற்றது. இவர் வாழ்ந்த காலத்தில் கம்யூனிஸ்ட்டு கள் விவசாய தொழிலாளர்களின் நலன் காக்க வும், தலித் மக்களின் உரிமைகளை வென்றெடுக்க வும் கடும் அடக்குமுறைகளை எதிர்கொண்டு போராடிக் கொண்டிருந்தனர். அப்போது இவர் கம்யூனிஸ்ட்டுகளின் நிலைபாட்டிற்கு அவ்வப் போது தன் ஆதரவை வெளிப்படுத்திக் கொண்டிருந்தார். சட்டமன்றத்தில் விவசாயிகள் - விவசாயத் தொழிலாளர்கள் பிரச்சனை விவாதிக்கப் பட்டபோது, கம்யூனிஸ்ட்டுகளை ஆதரித்து சகஜானந்தர் ஆற்றிய உரை பிரபலமானது. அந்த உரையில் அவர் குறிப்பிடுவதாவது “இன்னும் கூலி கொடுக்கக் கூடிய பிரச்சனை யில் தஞ்சை ஜில்லாவில் பெரிய கலகங்க ளும், குழப்பங்களும் ஏற்பட்டிருக்கின்றன. இவையெல்லாம் கம்யூனிஸ்ட்டுகள் தான் செய்கிறார்கள் என்று கூறுகிறார்கள். ஆனால், உண்மையில் கம்யூனிஸ்ட்டுகள் கலகம் செய்ய வில்லை. பயிரிட்டுவிட்டு சாப்பாட்டிற்கு கூட சரியாக கூலி கிடைக்காத காரணத்தால்தான் விவசாய தொழிலாளர்கள் மிராசுதார்களுக்கு எதிராக சண்டை போடுகிறார்கள். அவர்களைத் தான் கம்யூனிஸ்ட்டுகள் என்று அடக்குகிறார் கள். ஆகையால், கூலி உயர்வு செய்து ஒரு சட்டம் இயற்றுவது தான் நல்லது. இன்னும் பெரும் நிலக்கிழார்களிடமிருந்து நிலத்தை எடுத்து நிலமில்லாத விவசாயத் தொழி லாளர்களுக்கு பங்கிட்டு கொடுக்கும்படியாக கேட்டுக் கொள்கிறேன். அதோடு, விவசாயி களுக்கென்று ஒரு சம்பள போர்டு ஏற்படுத்தி விவசாயிகளுக்கு நியாயமான சம்பளம் கொடுக்க வேண்டுமென்றும் கேட்டுக் கொள்கி றேன்”.
இப்போது இந்த உரை கம்யூனிஸ்ட்டு கள் அன்று நடத்தி வந்த போராட்டங்களுக்கு தெம்பூட்டுவதாக அமைந்தது. நாடு விடுதலை அடைந்த பிறகு சில பிரமுகர் கள் இம்மாவட்டத்தில் சாதிய அமைப்புகளை உருவாக்க முயற்சிகளை மேற்கொண்டனர். ராமசாமி படையாச்சி - தமிழ்நாடு உழைப் பாளர் கட்சி என்ற கட்சியை துவக்கினார். இதே காலத்தில் வட ஆற்காடு, செங்கல்பட்டு மாவட்டங்களில் செல்வாக்கு பெற்றிருந்த எம்.ஏ.மாணிக்கவேலு நாயக்கர் காமன்வீல் கட்சியை துவக்கினார். சாதி அடிப்படையில் உருவாக்கப்பட்ட இக்கட்சிகள் நாடு விடுதலை யடைந்து முதல் பொதுத் தேர்தல் நடைபெற்ற காலத்திலேயே தமிழகத்தில் பெரும் சேதத்தை ஏற்படுத்தின. அப்போது தமிழகத்திற்கு தமிழ்நாடு என்ற பெயர் உருவாகி இருக்கவில்லை. சென்னை ராஜதானி என்றுதான் அழைக்கப்பட்டது. சென்னை ராஜதானி என்றால் தமிழகத்தில் பெரும் பகுதியும், ஆந்திரா, கேரளா மாநிலங் களின் ஒரு பகுதியும் உள்ளடக்கியதாகும். சென்னை ராஜதானியில் கம்யூனிஸ்ட்டுகள் பர வலாக வெற்றி பெற்றிருந்தனர். கம்யூனிஸ்ட்டு கள் தலைமையில் உருவாகி இருந்த மக்கள் முன்னணி ஆட்சி அமைப்பதற்கான வாய்ப்பு கள் இருந்தன. ஆனால், கம்யூனிஸ்ட் தலை மையிலான மக்கள் முன்னணி ஆதரவோடு வெற்றி பெற்றிருந்த எஸ்.எஸ்.ராமசாமி படை யாச்சியாரும், எம்.ஏ.மாணிக்கவேல் நாயக்க ரும் தேர்தலுக்கு பிறகு ராஜாஜியின் பேரத்திற்கு ப0ணிந்து மந்திரி பதவிகளை பெற்றுக் கொண்டு காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்க ஆதரவு அளித்தனர். இவ்வாறு, சாதிய சக்திக ளின் துரோகத்தால் சென்னை ராஜதானியில் கம்யூனிஸ்ட்டுகள் தலைமையிலான மக்கள் முன்னணியின் ஆட்சி உருவாவது தடுக்கப் பட்டது. சாதிய சக்திகளின் சீர்குலைவை 1952 லேயே எதிர்கொண்ட இயக்கம் கம்யூனிஸ்ட் இயக்கம். பிற்காலத்தில் அதாவது, 1980களில் வன்னியர் சங்கம் உருவாக்கப்பட்டது.
ராம தாஸ் அதன் நிறுவனராகவும், கோபால் தலை வராகவும், ராமமூர்த்தி அதன் பொதுச் செய லாளராகவும் தேர்வு செய்யப்பட்டனர். இந்த அமைப்பு உருவாக்கப்பட்ட பிறகு தென்னாற் காடு மாவட்டத்தின் நிலைமை பதட்டமானதாக மாறியது. பரவலான சாதிய மோதல்கள் ஏற்பட்டன. மறுபுறம், இதற்கு எதிர்வினையாக தலித் மக்களும் அமைப்பாக அணிதிரள்வது என்ற நிலைமை இம்மாவட்டத்தில் உருவானது. இதனால், பிரதானமாக பிற்படுத்தப்பட்டோர் - தலித் மோதல்கள் பல இடங்களில் உருவெடுத்தன. வன்னியர் சங்கம் தேர்தல் புறக்கணிப்பு குறித்து வேண்டுகோள் விடுத்தது. இதனை அமுல்படுத்து வது என்று வரும்போது, சாதி சங்க கொடிகளை தவிர இதர கட்சி கொடிகள் ஏற்றுவதை தடுப்பது, ஏற்கனவே ஏற்றப்பட்டிருந்த கொடிகளை இறக்கு வது, இதர அரசியல் கட்சிகளின் நிகழ்ச்சிகள் மற்றும் தலைவர்களின் சுற்றுப்பயணங்களை தடுப்பது போன்ற நடவடிக்கைகளில் சாதி சங்கம் இறங்கியது. இவ்வமைப்புகள் மட்டுமின்றி இதர சாதியின ரும் தங்களுடைய சாதி அமைப்புகளை துவங்கிய காலமாக அக்காலம் இருந்தது. பல்வேறு சாதியினரின் தனித்தனி மாநாடுகள் அக்காலத்தில் தென்னாற்காடு மாவட்டத்தில் நடந்தன. இவ்வாறு சாதிவெறி நடவடிக்கைகள் விரிவு படுத்தப்பட்டபோது பல முதலாளித்துவ அரசியல் கட்சிகள் செய்வதறியாது திகைத்து நின்றன அல்லது அதன் அணிகள் அந்தந்த சாதியினருடன் இரண்டறக் கலந்தனர். ஆனால், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இத்தகைய நிலைபாடுகளை வேடிக்கை பார்க்க வில்லை. மாறாக, சாதி அமைப்புகளின் ஜனநாயக விரோத நடவடிக்கைகளை முடிவுக்கு கொண்டு வரவும், மக்கள் ஒற்றுமையை பாதுகாக்கவும் அனைத்து ஜனநாயக சக்திகளையும் ஒருங்கிணைக் கும் பணியில் ஈடுபட்டது. மேலும், பிற்படுத்தப்பட்ட மக்களும், தலித் மக்களும் ஆகிய இரு தரப்புமே அடித்தட்டு உழைப் பாளிகளாக இருந்தனர். இம்மக்களை வர்க்க அடிப்படையில் ஒன்றுபடுத்துவது அவசர கடமை என சிபிஐ(எம்) முடிவுக்கு வந்தது. அதற்கான முறையில் களத்தில் இறங்கி தீவிரமான முறையில் செயல் பட்டது. மக்கள் ஒற்றுமை பிரச்சாரத்தை வலுவாக முன்னெடுத்தது. சாதி சங்கங்களின் நிலைபாட்டால் பல அரசியல் கட்சிகளின் கொடிகள் அன்றிருந்த சூழலில் இறக்கப்பட்டன அல்லது சாதிய சக்திகளால் அவை வெட்டி வீசப்பட்டன. மாறாக, அன்றைய தினம் வீழ்த்த முடியாத ஒரு கொடியாக செங்கொடி மட்டுமே திகழ்ந்தது என்பது வரலாறு.
மேலும், மக்கள் ஒற்றுமையை வலியுறுத்தும் லட்சக்கணக்கான துண்டுப்பிரசுரங்களை சோதனை யான அக்கால கட்டத்தில் நடைபயணமாக பிரச்சாரம் செய்து அனைத்துப்பகுதி மக்களுக்கும் கொண்டு சேர்த்த இயக்கம் செங்கொடி இயக்கம். இது மட்டு மல்ல, குமராட்சி, திருநாரையூர், எடையார், காட்டு மன்னார்குடி ஆகிய பிரதான மையங்களில் ஏராளமான மக்களை திரட்டி எழுச்சிமிக்க பொதுக் கூட்டங்களை நடத்தியது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி. காட்டு மன்னார்குடியில் நடைபெற்ற பிரம்மாண்டமான பொதுக் கூட்டத்தில் மோதலை தவிர்க்கவும், மக்கள் ஒற்றுமையை வலியுறுத்தியும் எழுச்சியுரை ஆற்றினார் என்.சங்கரய்யா. தமிழ்நாட்டில் கல்வி, வேலை வாய்ப்பில் 20 சதவிகி தமும், மத்திய அரசின் கல்வி, வேலை வாய்ப்பில் 2 சத விகிதமும் வன்னியர்களுக்கு வழங்க வேண்டுமென வலியுறுத்தி 1987 செப்டம்பரில் தொடர் சாலை மறியல் போராட்டத்தை துவக்கியது வன்னியர் சங்கம். கோரிக்கையில் நியாயம் இருந்தது என்பதை மறுப் பதற்கில்லை. ஆயினும், நடத்தப்பட்ட சாலை மறியல் போராட்டம் தலித் மக்களுக்கு எதிரான தாக்கு தலாக மாறியது. ஏராளமான தலித் குடிசைகள் தீக்கிரை யாகின. சில பகுதிகளில் வன்னியர் குடிசைகளும் தீயில் பொசுங்கின. சில பகுதிகளில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 21 பேர் பலியாகினர். இச்சூழலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அவசரமாக களம் இறங்கியது. மோதலை தவிர்க்கு மாறும், அமைதியையும், ஒற்றுமையையும் நிலை நாட்டுமாறும் மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டுமென மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுத்தது. இக்கோரிக்கைகள் தாங்கிய துண்டு பிரசுரங்களை கையில் ஏந்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பல்வேறு குழுக்கள் மிகுந்த ஆதங்கத்துடன் மக்களை சந்தித்தனர். கலவரம் நடந்த பகுதிகளில் - குடிசைகள் எரிந்த பகுதிகளில் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் தெரி வித்த இயக்கம் செங்கொடி இயக்கம். அன்றைய சூழலில் இது சாதாரண பணியல்ல, மிக அசாதாரண பணி. இருப்பினும், துணிச்சலோடும் நம்பிக்கையோ டும் மக்களை சந்தித்தது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி. இதே காலத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கமும், விவ சாய தொழிலாளர் சங்கமும் சிதம்பரம் கடலூர் பகுதி களில் பெருந்திரள் உண்ணாவிரத இயக்கத்தை நடத்தின. அன்றைய சூழலில் இது மிக முக்கியமான இயக்கமாக அமைந்தது. 1988 பொங்கல் திருவிழாவின்போது திரு இளைய பெருமாள் தாக்கப்பட்டார் என்ற வதந்தி திட்டமிட்டு பரப்பப்பட்டது. இதனையொட்டி பல பகுதிகளில் சாலை மறியல் நடத்தி பதட்டமான சூழல் ஏற்பட்டது. மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உடனடியாக தலையிட்டு மக்களை அமைதிப்படுத்தவும், ஒன்றுபடுத்தவும் பெரும் முயற்சிகளை எடுத்தது. இதனால், பல ஊர்களில் கலவரம் பரவாமல் தடுக்கப்பட்டது. இதே நாளில், பொங்கல் விளையாட்டு விழாவில் ஏற்பட்ட பிரச்சனையால் பதட்டம் ஏற்பட்டு அரசூரில் சாதி வெறியர்கள் தலித் மக்கள் பகுதிகளை தாக்கினர்.
குடிசைகளுக்கு தீ வைத்தனர். இக்கிராமத்தில் சிபிஐ(எம்) வளர்ச்சியை பொறுக்காமல் - ஊராட்சி மன்றத் தேர்தலில் செங்கொடி இயக்கம் பெற்ற வெற்றியை சகிக்க முடியாமல் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க ஊழியர் சேட்டுவை படுகொலை செய்தனர். காவல்துறையின் செயல்பாடு சாதி வெறியர்களுக்கு துணை போவதாக இருந்தது. இப்பிரச்சனையை பயன்படுத்தி கலவரச் சூழலை பரவலாக்க சாதிய சக்திகள் முயன்றன. சிபிஐ(எம்) தலையிட்டு அவ்வாறு பரவாமல் நிலைமையை தணிக்க கடுமையான முயற்சிகளை மேற்கொண்டது. மறுபுறம், குற்றவாளிகளை கைது செய்யவும், பாதிக்கப் பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கவும் வலியுறுத்தி ஊர்வலம், பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது. இதில் திரளான மக்கள் பங்கேற்றனர். இவ்வாறு, பல்வேறு சம்பவங்கள் நடந்த பின்னணி யில் சாதிய சக்திகள் தங்களை பலப்படுத்த புதிய வியூகங்களை உருவாக்கின. 1989இல் சட்டமன்ற தேர்த லில் வன்னியர் சங்கம் தேர்தலை புறக்கணித்தது. இந்த புறக்கணிப்பு எதிர்பார்த்த அளவில் நடைபெற வில்லை. தங்களது முயற்சி வெற்றி பெறவில்லை என புரிந்துகொண்ட பின்னணியில் வன்னியர் சங்கம் என்பதை பாட்டாளி மக்கள் கட்சி என்ற பெயரில் அரசியல் இயக்கமாக உருவாக்கினர். இதே காலத்தில் தலித் மக்கள் மத்தியில் மனித உரிமை கட்சி, செட்யூல்டு இன விடுதலை இயக்கம், இந்திய குடியரசு கட்சி, அம்பேத்கார் மக்கள் இயக்கம், பகுஜன் சமாஜ் கட்சி என பல அமைப்புகள் செயல்பட்டன. இதற்கு பின் விடுதலை சிறுத்தைகள் இயக்கம் உருவாகி அம்மக்கள் மத்தியில் மிக வேகமாக செயல்பட்டு வளர்ச்சி பெற்றது. இன்று விடுதலை சிறுத்தைகள் கட்சி என பெயர் மாற்றம் செய்யப்பட்டு பல்வேறு மாவட்டங்களிலும் செயல்பட்டு வருவதை பார்க்கிறோம். கடலூர் மாவட்டத்தில் மொத்த மக்கள் தொகையில் பெரும் பகுதி மக்களாக வன்னியர் மக்களும், தலித் மக்களும் உள்ளனர். இந்த இரு பிரிவினரும் ஏழ்மை யான கடும் உழைப்பாளிகள். உழைக்கும் வர்க்கத்தின் பிரிக்க முடியாத அங்கம் இவர்கள். அன்றாட வாழ் விற்கே இவர்கள் பெரும் துயரங்களை சந்தித்து வரு கின்றனர். ஆனால், இவர்களை சாதிய சக்திகள் பிளவுபடுத்தி மோதலை உருவாக்க பெருமுயற்சி களை செய்கின்றனர். இவர்களை ஒன்றுபடுத்துவதும், வர்க்கமாக அணி திரட்டுவதும் அவசரத் தேவை யாகும். இதற்கான பணியில் சிபிஐ(எம்) உள்பட இடது சாரி இயக்கங்கள் வலுவாக ஈடுபட்டு வருகின்றன. அதே நேரம், தலித் மக்கள் மீது ஏராளமான ஒடுக்கு முறைகளும், வன்கொடுமைகளும் ஏவப்படுகின்றன. இச்சூழல் இன்றளவும் நீடிக்கிறது. இத்தகைய ஒடுக்கு முறைகளிலிருந்து தலித் மக்களை விடுவிக்கவும், இவர்கள் சமூக விடுதலை பெறவும் இம்மாவட்டத்தில் ஏராளமான இயக்கங்களையும், போராட்டங்களையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி - வர்க்க, வெகுஜன அமைப்புகள் - தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி நடத்தியுள்ளன.