tamilnadu

img

சிபிஎம் திண்டிவனம் வட்டச் செயலாளர் திருமணம்

சிபிஎம் திண்டிவனம் வட்டச் செயலாளர் திருமணம்

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் வட்டச் செயலாளர் கண்ணதாசன்-சி.சரிதா ஆகியோரது சடங்கில்லா திருமணத்தை சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் தலைமை தாங்கி நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்தினார். திண்டிவனத்தில் மே 28 அன்று நடைபெற்ற இந்த திருமணத்தில் மாநில செயற்குழு உறுப்பினர் டி.ரவீந்திரன், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில பொதுச் செயலாளர் கே.சாமுவேல்ராஜ், பொதுக் கல்விக்கான மாநில மேடை பொதுச்செயலாளர் பு.பா.பிரின்ஸ் கஜேந்திரபாபு, சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினர் ஆர்.வேல்முருகன், விழுப்புரம் மாவட்டச் செயலாளர் என்.சுப்பிரமணியன், மாநிலக் குழு உறுப்பினர் எஸ்.கீதா, கள்ளக்குறிச்சி மாவட்டச் செயலாளர் டி.எம்.ஜெய்சங்கர், ஒலக்கூர் ஒன்றிய பெருந் தலைவர் ஜி.சொக்கலிங்கம், சிபிஐ மாவட்டப் பொருளாளர் ஆ.இன்பஒளி, திராவிடர் கழகத்தை சேர்ந்த தா.இளம்பரிதி, திண்டிவனம் நகர மன்ற துணைத் தலைவர் ராஜலக்ஷ்மி வெற்றிவேல், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பி.குமார் வி.ராதாகிருஷ்ணன், எஸ்.முத்துக்குமரன், ஆர்.மூர்த்தி, ஏ.சங்கரன், ஜி.ராஜேந்திரன், எஸ்.வேல்மாறன், எஸ்.அறிவழகன், ஆர்.டி.முருகன் மற்றும் வழக்கறிஞர் பாங்கை ஜி.சேகர்,தமாக மாவட்டத் தலைவர் கே.சீனுவாசன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். வட்டக் குழு உறுப்பினர் டி.ராமதாஸ் வரவேற்றார்.