tamilnadu

img

நீட் தேர்வு முறைகேடு: சிபிஎம் ஆர்ப்பாட்டம்

நீட் தேர்வில் நடைபெற்ற முறைகேடுகளை புலன் விசாரணை செய்யக் கோரி சனிக்கிழமையன்று (ஜூன் 22) குன்றத்தூரில் சிபிஎம்  சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. குன்றத்தூர் பகுதிக்குழு உறுப்பினர் எஸ்.விஜயகுமார் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் காஞ்சிபுரம் மாவட்டச் செயலாளர் சி.சங்கர், செயற்குழு உறுப்பினர் பி.ரமேஷ் ஆகியோர்  உரையாற்றினர். குன்றத்தூர் வட்டக்குழு உறுப்பினர்கள்  கே.புருஷோத்தமன், ஆர்.பிரேமகுமாரி, ஆர்.சுகுமார், எஸ்.திருஞானம், எஸ்.அண்ணாதுரை, ஆர்.நந்தகோபால், எம்.மோகனன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.