நீட், கள்ளச்சாராயம், நெல்லை சிபிஎம் தாக்குதல் சம்பவத்தை கண்டித்து திருத்தணியில் சிபிஎம் சார்பில் வட்டச் செயலாளர் அந்தோணி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டச் செயற்குழு உறுப்பினர் பன்னீர் செல்வம், மாவட்ட செயற்குழு உறுப்பினர் பெருமாள், மாவட்ட குழு உறுப்பினர் அப்சல் அகமத், ஆர் கே பேட்டை வட்ட செயலாளர் சிவ பிரசாத், வட்டக் குழு உறுப்பினர்கள் பாலாஜி, கரிமுல்லா, ரீசர், ஜெயவேல், கணேசன், வஜ்ஜிரவேல் ஆகியோர் பங்கேற்றனர்.