சிபிஎம் மக்கள் சந்திப்பு பிரச்சார இயக்கம்
நாமக்கல், ஜூன் 21- ஒன்றிய மோடி அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித் தும், தேர்தல் வாக்குறுதிகளை தமி ழக அரசு நிறைவேற்ற வேண்டும், என வலியுறுத்தியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் பிரச்சார இயக்கத்தில் ஈடுபட்டனர். நாமக்கல் மாவட்டம், பள்ளி பாளையம் தெற்கு ஒன்றியத் திற்குட்பட்ட பகுதிகளில் நடை பெற்ற பிரச்சாரத்திற்கு ஒன்றியச் செயலாளர் லட்சுமணன் தலைமை வகித்தார். இதில் பள்ளிபாளையம் அரசு மருத்துவமனையில் கூடுதல் கட்டடம், ரத்த வங்கி, கூடுதல் பணி யாளர்கள் நியமிக்க வேண்டும். வீட்டுமனை கேட்டு விண்ணப்பித்த அனைவருக்கும் பட்டா வழங்க வேண்டும், உள்ளிட்ட கோரிக்கை கள் வலியுறுத்தப்பட்டன. கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.அசோகன், மாவட்டக்குழு உறுப்பினர் ஆர்.ரவி உட்பட பலர் கலந்து கொண்டனர். எலச்சிபாளை யம் கிழக்கு ஒன்றியக்குழு சார்பில் நடைபெற்ற பிரச்சார இயக்கத்தில், ஒன்றியச் செயலாளர் தேவராஜ் சிறப்புரையாற்றினார். பள்ளிபாளையம் வடக்கு ஒன்றி யம், கல்லங்காட்டுவலசு பகுதியில் கிளைச் செயலாளர் தியாகராஜன் தலைமையில் பிரச்சார இயக்கம் நடைபெற்றது. மாவட்டக்குழு உறுப்பினர் மணிகண்டன் சிறப்பு ரையாற்றினார். பல்லக்காபாளையம் கிளைச் செயலாளர் ஆர்.கோவிந்தசாமி தலைமையில், பல்லக்காபாளை யம் எக்ஸெல் கல்லூரி, கிணத்துப் பாளையம் உள்ளிட்ட பகுதியில் பிரச்சாரம் நடைபெற்றது. மாவட் டக்குழு உறுப்பினர் சி.துரைசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர். திருச்செங்கோடு நகராட்சிக்குட் பட்ட பகுதிகளில், கிளைச் செயலா ளர்கள் சிங்காரவேல், ஈஸ்வரன், மணிவண்ணன் ஆகியோர் தலை மையில் பிரச்சார இயக்கம் நடை பெற்றது. மூத்த தோழர் ஆதி நாராயணன் துவக்கி வைத்தார். இதில் மாவட்ட செயற்குழு உறுப் பினர்கள் ஏ.ரங்கசாமி, கணேஷ் பாண்டியன், நகரச் செயலாளர் சீனி வாசன் உட்பட பலர் கலந்து கொண் டனர். திருப்பூர் திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகே உள்ள குடிமங்கலம் நால் ரோடு பகுதில் துவங்கிய பிரச்சாரத் திற்கு, ஒன்றியக்குழு உறுப்பினர் மோகனசுந்தரம் தலைமை வகித் தார். ரதராஜபுரம், கோட்டமங்க லம், வெள்ளியம்பாளையம், புக்கு ளம் உள்ளிட்ட பகுதியில் பிரச்சார இயக்கம் நடைபெற்றது. இதில் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கனகராஜ், ஒன்றியச் செயலாளர் சசிகலா உள்ளிட் டோர் கலந்து கொண்டனர். இதே போன்று, வெள்ளக்கோவில் நடே சன் நகரில் நடைபெற்ற நடைபயண பிரச்சார இயக்கத்திற்கு, கட்சியின் கிளைச் செயலாளர் ப.கருப்புசாமி தலைமை வகித்தார். தாலுகா செய லாளர் எம்.கணேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர். கோவை பொள்ளாச்சி - பழனி தேசிய நெடுஞ்சாலையில், கோமங்கலம் புதூரில் சுங்கச்சாவடி அமைக்கும் முயற்சியை கைவிட வேண்டும். கோமங்கலம் புதூரில் அனைத்து பேருந்துகளும் நின்று செல்ல வேண்டும் என்ற உத்தரவு இருந் தும், அதனை மதிக்காத தனியார் பேருந்துகள் மீது உரிய நடவ டிக்கை எடுக்க வேண்டும், உள் ளிட்ட கோரிக்கைகளை வலியு றுத்தி கோவை மாவட்டம், பொள் ளாச்சி தாலுகாக்குழு சார்பில், கோமங்கலம் புதூர் பகுதியில் மக் கள் சந்திப்பு பிரச்சார இயக்கம் நடைபெற்றது. தாலுகாக்குழு உறுப்பினர் வி.பாலகுருசாமி தலைமை வகித்தார். இதில் மாவட் டச் செயலாளர் சி.பத்மநாபன், தாலுகா செயலாளர் எம்.அன்பர சன் உட்பட பலர் கலந்து கொண்ட னர்.