சென்னை, செப். 28 – சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை அலுவல் மொழியாக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வழக்கறிஞர்கள் மாநாடு வலியுறுத்தி உள்ளது. மத்தியசென்னை வழக்கறிஞர்கள் இடைக்குழுவின் 7வது மாநாடு சனிக்கிழமையன்று (செப். 28) நடைபெற்றது. இந்த மாநாட்டில், ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள மூன்று குற்றவியல் புதிய சட்டங்களை திரும்ப பெற வேண்டும், ஒரே நாடு, ஒரே தேர்தல் முறையை அமல்படுத்தும் முயற்சியை கைவிட வேண்டும். இளம் வழக்கறிஞர்கள் அனைவருக்கும் முதல் 5 வருடங்க ளுக்கு மாதம் 5 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. மாநாட்டு செங்கொடியை மூத்த வழக்கறிஞர் சிகரம் ச.செந்தில்நாதன் ஏற்றினார். பி.சீனிவாசன், எம்.சமந்தா தலைமையேற்க, எஸ்.ஷினு வரவேற்றார். மாநாட்டை தொடங்கி வைத்து மாநிலக்குழு உறுப்பினர் ஐ.ஆறுமுகநயினார் பேசினார். வேலை, ஸ்தாபன அறிக்கையை இடைக்குழுச் செயலாளர் ச.சிவக்குமார் சமர்ப்பித்தார். மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் கே.முருகன் மாநாட்டை வாழ்த்தி பேச, ஆர்.முரளி நிறைவுரையாற்றினார். 7 பேர் கொண்ட இடைக்குழுவின் செயலாளராக பி.சீனிவாசன் தேர்வு செய்யப்பட்டார்.