tamilnadu

img

சிபிஎம் கொடுமுடி தாலுகா செயலாளரை தாக்கியவர்களை உடனே கைது செய்க... சிபிஎம் வலியுறுத்தல்....

சென்னை:
சிபிஎம் கொடுமுடி தாலுகாச் செயலாளர் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தியவர்களை தமிழக அரசுஉடனடியாக கைது செய்ய வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு வலியுறுத்தி யுள்ளது.இதுகுறித்து கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஈரோடு மாவட்டம், கொடுமுடி தாலுகாச்செயலாளராக  கே.பி. கனகவேல் பணியாற்றி வருகிறார். பிப்ரவரி 21 அன்று பணி நிமித்தமாக வெளியே சென்றஇவரை ரவுடிக் கும்பல் ஒன்று பின்தொடர்ந்து சென்று உருட்டுக்கட்டை மற்றும் ஆயுதங்களால் கொலை செய்யும் நோக்கோடு சரமாரியாக தாக்குதல் நடத்தியுள்ளது. அலறல் சத்தம் கேட்டு அவரது மனைவி மற்றும்அக்கம் பக்கத்தினர் வந்ததால் ரவுடிக்கும்பல் அங்கிருந்து தப்பியோடி யுள்ளது. தலையின் முன் பகுதி, கழுத்து, இடுப்பின் இடது பகுதி, வலது கணுக்கால் ஆகிய இடங்களில் வெட்டப்பட்டு, உயிருக்குப் போராடி படுகாயமடைந்த நிலையில், கனகவேலை மீட்டு  மருத்துவமனையில்  சேர்த்துள்ளனர். 

கே.பி. கனகவேலும், இவரது மனைவி விவசாயத்தொழிலாளர் சங்கத்தின்  மாவட்டச் செயலாளர் கே. சண்முகவள்ளியும் ஏழை, எளியஉழைக்கும் மக்களின் பிரச்சனைகளுக்காக மக்களைத் திரட்டி பல்வேறுபோராட்டங்களில் முன்னிலை வகிப்பவர்கள். உள்ளாட்சி அமைப்புகளில் நடைபெறும் முறைகேடுகள், கிராமப்புற வேலை உறுதித் திட்டத்தில்நடைபெற்ற பணிகள் ஆகியவை குறித்து தகவல் பெறும் உரிமைச் சட்டத்தினை பயன்படுத்தி பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் கிடைப்பதற்காக தொடர்ந்து போராடி வருபவர்கே.பி. கனகவேல். இதனை பொறுத்துக் கொள்ள முடியாத நபர்கள் இவர் மீது கொலைவெறித்தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த கொலைவெறித்தாக்குதலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது.

கே.பி. கனகவேல் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தியவர்களை உடனடியாக அடையாளம் கண்டு கைது செய்து, சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தமிழக அரசை வலியுறுத்துகிறது.

;