tamilnadu

img

பட்டியலின மக்களின் வழிபாட்டு உரிமையை பாதுகாக்க சிபிஎம் வலியுறுத்தல்

பட்டியலின மக்களின் வழிபாட்டு உரிமையை பாதுகாக்க சிபிஎம் வலியுறுத்தல்

புதுச்சேரி, பிப். 20- புதுச்சேரி விநாயகம் பட்டு கிராமத்தில் பட்டிய லின மக்களின் வழிபாட்டு உரிமையை பாதுகாக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியரிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலி யுறுத்தியது. புதுச்சேரி மாநிலம், மண்ணாடிப்பட்டு கொம்யூன், விநாயகம் பட்டு கிராமத்தில் பட்டியலின மக்கள் வாழும் பகுதியில்  கோவில் கட்டுமானப் பணி கள் நடைபெற்று வரு கிறது.  இதற்கு கிரா மத்தில் உள்ள மாற்று சமூ கத்தை சார்ந்த சிலர் எதிர்ப்பு தெரிவித்ததால், பதட்ட மான சூழ்நிலை உரு வானது. எந்தவித அசம்பா வித சம்பவங்கள் நடை பெறாமல் தடுக்க, ஆலய கட்டுமானப் பணி தற்காலி கமாக நிறுத்தி வைக்கப் பட்டுள்ளது. கள ஆய்வு  இச் சம்பவத்தை கேள்விப்பட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் எஸ். ராமச் சந்திரன், மாநில செயற்குழு உறுப்பினர்கள் வெ.பெரு மாள், ஆர். ராஜாங்கம், மண்ணாடிபட்டு கமிட்டி செயலாளர் இரா.அன்பு மணி, தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநிலத் தலைவர் கொளஞ்சியப்பன், செய லாளர் சரவணன் ஆகியோர் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நேரில் சென்று கள ஆய்வு மேற்கொண்டனர். அப்போது இரு பிரிவு  மக்க ளிடம்   பேசி சுமுக தீர்வு ஏற்படுத்தப்பட்டது.  ஆட்சியருடன் சந்திப்பு பின்னர், விநாயகம் பட்டு சம்பவம் தொடர்பாக எஸ். ராமச்சந்திரன் தலைமை யில் புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன்  புதன்கிழமை (பிப்.19) சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.  அதில், விநாயகம் பட்டு கிராமத்தில் அனைத்துப் பகுதி மக்கள் சுமுகமாகவும், அமைதியாகவும் வாழ்வ தற்கு, பட்டியலின மக்க ளின் வழிபாட்டு உரிமையை பாதுகாக்க வேண்டும். மக்களிடம் வெறுப்பு ணர்வை தூண்டுவோர் மீது உரிய நடவடிக்கை  எடுக்க மாவட்ட நிர்வாகம் ஆக்கப்பூர்வமான நடவடிக் கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று வலி யுறுத்தியுள்ளனர். மனுவை பெற்றுக் கொண்ட ஆட்சி யர் குலோத்துங்கன் உரிய நடவடிக்கை எடுப்பதாக தலைவர்களிடம் உறுதிய ளித்தார்.