tamilnadu

img

எரி உலை திட்டத்தை திரும்பப்பெற வலியுறுத்தி சிபிஎம் தர்ணா!

சென்னை,மே.16- சென்னையில் எரி உலை திட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் தர்ணாவில் ஈடுபட்டனர். 
வட சென்னை கொடுங்கையூரில் புதிதாக அமைக்க உள்ள குளப்பையிலிருந்து மின்சாரம் எடுக்கும் எரி உலை திட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் தலைமையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர்  தர்ணாவில் ஈடுபட்டனர்.
மேலும் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் எழில் நகரில் உள்ள குப்பை கழிவுகள் கொட்டும் வளாகத்தை பார்வையிட்டார். வடசென்னை மாவட்டச் செயலாளர் எம்.ராமகிருஷ்ணன், மாநிலக்குழு உறுப்பினர் எல்.சுந்தரராஜன், மாமன்ற உறுப்பினர் பா.விமலா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.