tamilnadu

தொழிலாளர்களுக்கு ஆதரவாக சிபிஎம் ஆர்ப்பாட்டம்

சிறீபெரும்புதூர்,மே 2-இருங்காட்டுக் கோட்டையில் செயல்படும் வாகனங்களுக்கு கண்ணாடி தயாரிக்கும் தொழிற்சாலையில் தொழிலாளர்கள் சட்ட விரோதமாக பணிநீக்கம் செய்திருப்பதை கண்டித்து சிஐடியு சார்பில் ஒரு மாதத்திற்கு மேலாக தொடர் வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெற்று வருகின்றது. இப்பிரச்சனையில் மாவட்ட நிர்வாகம், தொழிலாளர் நலத்துறை உடனடியாக தலையிட்டு தீர்வு காண வலியுறுத்தியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் திருப்பெரும்புதூர் பேருந்து நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.ஹூண்டாய் கிளைச் செயலாளர் வடிவேலன் தலைமை தாங்கினார். சிஐடியு மாவட்டத் தலைவர் எஸ்.கண்ணன், செயலாளர் இ.முத்துக்குமார், சிபிஎம் வட்டச் செயலாளர் பி.ரமேஷ், மாவட்டக்குழு உறுப்பினர் டி.லிங்கநாதன் உள்ளிட்ட பலர் பேசினர். ஆர்ப்பாட்டத்தை மாவட்டச் செயலாளர் இ.சங்கர் நிறைவுசெய்தார். இந்த ஆர்ப்பாட்டத்தில் அஸாகி தொழிலாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தொழிற்சாலைகளைச் சேர்ந்த தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

;