tamilnadu

img

தமிழறிஞர் சோ.சத்தியசீலன் மறைவுக்கு சிபிஎம் இரங்கல்....

சென்னை:
தமிழறிஞர் சோ.சத்தியசீலன் மறைவுக்கு மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல் தெரிவித்துள்ளது.இதுகுறித்து கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி வருமாறு:

மூத்த தமிழறிஞரும், இலக்கிய சொற்பொழிவாளருமான பேராசிரியர் சோ.சத் தியசீலன் மறைவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்மாநிலச் செயற்குழு சார்பில்ஆழ்ந்த இரங்கலை தெரிவித் துக் கொள்கிறோம்.பேராசிரியர் சத்தியசீலன் பட்டிமன்றம், வழக்காடுமன்றம் என்ற இலக்கிய வடிவத்தை பட்டிதொட்டியெங் கும் கொண்டு சென்றவர்களில் ஒருவர். கல்லூரி தமிழ்ப் பேராசிரியராகவும், முதல்வராகவும், பல்வேறு பல்கலைக்கழகங்களில் பாடத்திட்டக் குழுஉறுப்பினராகவும் பணியாற்றியுள்ள அவர், கல்வித் துறையில் நீண்ட அனுபவம் பெற்றவர். ஏராளமான இலக்கிய நூல்களை எழுதியவர்.முற்போக்கான கருத்தோட்டங்களை கொண்டவர். சிறந்த இலக்கிய ஆய்வாளரும் தமிழறிஞருமான அவரது மறைவு, இலக்கிய உலகிற்கு பேரிழப்பாகும். அவரை பிரிந்து வாடும் அன்னாரது குடும்பத்தினருக்கு மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்சார்பில் ஆறுதலை தெரிவித் துக் கொள்கிறோம்.இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

;