tamilnadu

img

புதுப்பாளையத்தில் மின் தகன மேடை அமைக்க கோரி சிபிஎம் பிரச்சாரம்

புதுப்பாளையத்தில் மின் தகன மேடை  அமைக்க கோரி சிபிஎம் பிரச்சாரம்

கடலூர், ஜூன்15- கடலூர் புதுப்பாளையம் பகுதியில் மின் தகன மேடை, மனைப்பட்டா உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் பிரச்சார பயணம் நடைபெற்றது. கடலூர் புதுப்பாளையம் பகுதியில் மசூதி தெருவில் உள்ள ஈம காரிய கொட்டையை புதுப்பிக்க கோரியும், புதுப்பாளையம் சுப்பிரமணியர் கோவில் தெருவில் அரசு புறம்போக்கில் பல்லாண்டு காலமாக வசிக்கும் நூற்றுக்கு மேற்பட்ட மக்களுக்கு மனைபட்டா வழங்க வேண்டும், வன்னியர் பாளையம் பகுதியில் மழை நீர் வடிகால் வாய்க்கால் அமைக்க வேண்டும், கடலூர் புதுப்பாளையம், வன்னியர் பாளையம் பகுதியில் 50 ஆண்டுகளுக்கு மேலாக அமைக்கப்பட்ட குடிநீர் குழாய்களை மாற்றி புதிய குடிநீர் குழாய்கள் அமைத்துத்தர வேண்டும், புதுப்பாளையம் முதல் பீச் ரோடு வரையில் உள்ள சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் உள்ளிட்ட பல்வேறுகோரிக்கைகள்  வலியுறுத்தி சிபிஎம் சார்பாக பிரச்சார பயணம் நடைபெற்றது. கட்சியின் மாவட்ட குழு உறுப்பினர் எஸ்.கே.பக்கிராம் தலைமையில் மாவட்ட செயலாளர் கோ. மாதவன் பிரச்சாரத்தை துவக்கி வைத்து சிறப்புரை ஆற்றினார். மாநகர செயலாளர் ஆர்.அமர்நாத், மாவட்ட குழு உறுப்பினர் பி. வெங்கடேசன், மாநகர குழு உறுப்பினர்கள் பூபதி, தமிழ்மணி, சாந்தகுமாரி, ஆனந்த், சீனு, உள்ளிட்ட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.  வன்னியர் பாளையத்தில் தொடங்கிய பிரச்சார நடை பயணம் புதுப்பாளையம் கடைவீதி, சுப்பிரமணியர் கோவில் தெரு, மாட்டுப்பட்டி  தெரு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பொதுமக்களிடம் சென்று துண்டு பிரசுரம் வழங்கி பிரச்சாரம் செய்தனர்.