tamilnadu

img

சிபிஎம் முறையீடு எதிரொலி : திடீர் நகரில் அதிகாரிகள் ஆய்வு

புரசைவாக்கம் பிரிக்லின் சாலை, திடீர் நகர் பகுதி மக்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி ஜூலை 8ந் தேதி மார்க்சிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம் நடத்தி, மனு அளித்தது. அதனடிப்படையில் மாநகராட்சி துணை ஆணையர் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டும் அதிகாரிகள் செயல்படுத்தவில்லை. இதனையடுத்து மாநகராட்சி ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணனை சந்தித்து கட்சியின் மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் ஜி.செல்வா முறையிட்டார். இதனையடுத்து அதிகாரிகள் திடீர் நகர் பகுதிக்கு சென்று ஆய்வு நடத்தி அடிப்படை பணிகளை மேற்கொள்ளும் பணிகளை தொடங்கினர்.