சென்னை, அக். 2 - ஈஷா யோகா மையத்தின் அடாவடிகள் குறித்து, சென்னை உயர் நீதிமன்றம் எழுப்பி யிருக்கும் அடுக்கடுக்கான கேள்விகளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்றுள்ளது.
இதுதொடர்பாக, மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டிருப்பதாவது:
கோவையில் அமைந்துள்ள ஈஷா மையத்தின் பல்வேறு அடாவடித் தனங்களை சென்னை உயர் நீதிமன்றம் கண்டித்துள்ளதோடு, அதன் தொடர்ச்சி யாக எடுத்துவரும் நடவடிக்கைகளை சி.பி.ஐ(எம்) மாநிலச் செயற்குழு பாராட்டி வரவேற்கிறது.
பெற்றோரின் கவலை
கோவை வடவள்ளி பகுதியைச் சேர்ந்த காமராஜ் என்பவர், தனது இரு மகள்களும் ஈஷா மையத்தில் தங்கிக் கொண்டு, முதிய பெற்றோரைக் கை விட்டிருப்பது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகியிருந்தார். வெளி நாடுகள் சென்று பொறியியல் படிப்பு முடித்த அந்த இரு மகள்களும் தற்போது மொட்டையடித்துக் கொண்டு ஈஷா மை யத்தில் துறவு வாழ்க்கை வாழ நிர்ப் பந்திக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றத்தில் புகார் கூறியுள்ளார். இதனை விசாரித்த நீதிமன்றம் இந்த வாதத்தின் மீது மிகச் சரியான கேள்விகளை எழுப்பியுள்ளது.
ஊருக்கு மட்டும் உபதேசம்?
தனது மகளின் சொந்த வாழ்க்கையை ஆடம்பரமாகவும், பாதுகாப்பாகவும் பராமரிக்கும் ஈஷா மையத்தை நடத்தும் ஜக்கி வாசுதேவ் மற்றவர்களின் குழந்தை களை, பெண்களை பெற்றோரைக் கை விட்டுத் துறவு வாழ்க்கை வாழ அறிவுறுத்து வது, மேலும், அந்த மையத்தில் பயிற்சி பெறக்கூடியவர்கள், வயது முதிர்ந்த பெற்றோரைக் கைவிடச் செய்வது ஆகியவற்றை நீதிமன்றம் வலுவாக கண்டித்துள்ளது. சிறுவர்களுக்கு எதிரான பாலியல் தொந்தரவில் ஈடுபட்டு போக்சோ வழக்கை எதிர்கொள்ளும் மருத்துவர் உள்ளிட்டோர் ஈஷா மையத்தில் தங்கிச் செயல்படுவதையும் இந்த வழக்கு வெளிப்படுத்தியுள்ளது.
ஈஷா மீது குவியும் புகார்கள்
இது மட்டுமின்றி ஈஷா யோகா மையத்தின் மீது நில அபகரிப்பு, போதைப்பொருள் பயன்படுத்துவது, வளாகத்தில் நடைபெற்ற மர்மமான கொலைகள் என அடுக்கடுக்கான பல்வேறு புகார்கள் ஏற்கெனவே பலரால் எழுப்பப் பட்டுள்ளன. இதன் மீதான வலுவான போராட்டங்களும் நடைபெற்று வரு கின்றன. இந்நிலையில் ஆட்கொணர்வு மனு மீதான சென்னை உயர் நீதிமன்றத்தின் நடவடிக்கைகள் ஆக்கப்பூர்வமான தாகவும், நம்பிக்கையளிப்பதாகவும் உள்ளன.
உரிய புலன் விசாரணை தேவை
எனவே, ஈஷா யோகா மையத்தின் மீதான அனைத்துப் புகார்கள் மீதும் சங்பரி வார் அமைப்புகள் உள்ளிட்ட எவ்வித அர சியல் குறுக்கீடுகள் இல்லாமல் உரிய புலன் விசாரணை செய்து அதன் அறிக்கை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுவதை உறுதி செய்வதோடு, குற்றங்கள் மீதான பாரபட்சமற்ற சட்டப்பூர்வமான நட வடிக்கைகள் எடுக்கப்படுவதையும் காவல்துறையும், தமிழக அரசும் உறுதி செய்ய வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வலியுறுத்துகிறது.
இவ்வாறு கே. பாலகிருஷ்ணன் தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.