சென்னை,அக்டோபர்.19- சிதம்பரம் கோயில் தீட்சிதர்களின் நடவடிக்கை குறித்த உயர்நீதிமன்றத்தின் கருத்துகள் நியாயமானவை என சிபிஎம் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
சிதம்பரம் நடராஜர் கோவிலை, தீட்சிதர்களின் தனிச் சொத்து போலக் கருதிக்கொண்டு ஆணவத்துடன் செயல்படுவதைச் சுட்டிக்காட்டி, சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ள கருத்துக்கள் நியாயமானவை, வரவேற்புக்குரியவை.
நடராஜர் கோயிலில் தீட்சிதர்களால் தனக்குப் பிரச்சனை ஏற்பட்டதாகக் கூறியுள்ள நீதிபதி, மன கஷ்டங்களுக்காகக் கோவிலுக்கு வரும் பக்தர்களை அவமானப்படுத்துவதும், கோவிலுக்கு வருபவர்கள் எல்லாம் சண்டைக்கு வருவது போலவே தீட்சிதர்கள் நினைப்பது நல்லதல்ல
தங்களை கடவுளுக்கு மேலானவர்கள் எனக் கருதிக்கொள்ளக் கூடாது எனக் கருதிக்கொள்ளக் கூடாது எனக் கண்டிப்புடன் நீதிபதி விமர்சித்திருப்பது நியாயமானது. தனிச்சட்டம் மூலம் அந்த கோவில் நிர்வாகத்தை அரசின் கட்டுப்பாட்டுக்கு உட்படுத்தி ஒழுங்கு படுத்துவதே இப்பிரச்சனைக்குத் தீர்வாக அமையும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சிபிஎம் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.