tamilnadu

அறிவாலயத்தில் முதல்வர் ஆலோசனை

சென்னை, ஆக. 26 - 2030-ஆம் ஆண்டுக்குள் தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலராக (சுமார் 83 லட்சம் கோடி ரூபாய்) உயர்த்துவதற்கு இலக்கு நிர்ணயித்து அதற்கான நடவடிக்கை களை, மு.க. ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது.

இதற்காக கடந்த ஜனவரி 7, 8  தேதிகளில் சென்னையில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப் பட்டது. இதில், ரூ. 6 லட்சத்து 64 ஆயிரம் கோடி முதலீட்டுக்கான ஒப்பந்தம் கையெழுத்தானது.

தொடர்ந்து கடந்த வாரம் நடை பெற்ற தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு 2024-இல் முதலீடுகள் மற்றும் முதலீடுகளுக்கான தொடக்கம் என சேர்த்து  மொத்தமாக 68 ஆயிரத்து 773  கோடி ரூபாய்க்கான திட்டங்கள் தொடங்கப்பட்டன. இதன் மூலம் 1 லட்சத்து 6 ஆயிரத்து 800 பேருக்கு உறுதி செய்யப்பட்ட வேலை வாய்ப்புகள் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் பொருளாதார இலக்கை எட்டுவதன் ஒரு பகுதியாக சுமார்  17 நாட்கள் பயணமாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை (ஆக. 27)  இரவு அமெரிக்கா புறப்பட்டுச் செல்கிறார். ஆகஸ்ட் 28 அன்று சான்பிரான்சிஸ் கோவில் உலகின் முன்னணி நிறுவனங் களின் பிரதிநிதிகள் சந்திக்க உள்ளார்.

இந்தப் பின்னணியில் முதல்வர் அமெரிக்கப் பயணத்தில் உள்ள நாட் களில் தமிழ்நாட்டில், திமுக கட்சிப் பணி களை ஒருங்கிணைப்பது, தொய்வின்றி மேற்கொள்வது குறித்து அமைச்சர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளுடன் முதலமைச்சர் ஆலோசனை நடத்தினார்.