tamilnadu

img

விஜயபாஸ்கருக்கு கொரோனா தடுப்பூசி....

சென்னை:
தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார்.

கொரோனா தடுப்பூசி கடந்த 16ஆம் தேதி முதல் நாடுமுழுவதும் போடப்பட்டு வருகிறது. தடுப்பூசி போட்டுக்கொள்வதற்கான விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கு தமிழக சுகாதாரத்துறை ஏற்பாடுகள் செய்துள்ளது.இந்நிலையில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார்.பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில்  மக்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்தவே கோவாக்சின் தடுப் பூசியை எடுத்துக்கொண்டேன்.  தமிழகத்தில் 907 பேர் மட்டுமே கோவாக்சின் எடுத்துள்ளதால் 908வது நபராக நான் போட்டுக் கொண்டேன் என்றார்.

;