tamilnadu

img

கொரோனா பரவல்: ஆட்சியர்களுடன் தலைமைச் செயலாளர் ஆலோசனை....

சென்னை:
தமிழகத்தில் கரோனா தொற்று அதிகம் பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களின் மாவட்ட ஆட்சியர்களுடன் தமிழக அரசின் தலைமைச் செயலாளர் வே.இறையன்பு காணொலி காட்சி மூலம் ஆலோசனை மேற்கொண்டார்.தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலின் இரண்டாம் அலை தீவிரமாக உள்ளது. மே 20ஆம் தேதி ஒருநாள் மட்டும் தமிழகம் முழுவதும் 35,579 பேர் தொற்றால் பாதிக் கப்பட்டுள்ளனர். சென்னையில் மட்டும் 6,073 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் 397 பேர் கொரோனா தொற்றுக்கு உயிரிழந்துள்ளனர். இதனால், உயிரிழப்பு எண் ணிக்கை 19,131 ஆக அதிகரித்துள்ளது.தினசரி தொற்று எண்ணிக்கையில் சென்னை தொடர்ந்து முதலிடம் வகித்து வருகிறது. சென்னை தவிர்த்து, அதன் 
சுற்றுவட்டார மாவட்டங்களான திருவள் ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களிலும், தென் மாவட்டங்களான தூத்துக்குடி, குமரி, தேனி உள்ளிட்ட மாவட்டங்களிலும் தொற்றுப் பரவல் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், தொற்று பரவல் அதிகமாக உள்ள சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், கோவை, கடலூர், ஈரோடு, குமரி, நீலகிரி, தூத்துக்குடி, தேனி ஆகிய மாவட் டங்களின் ஆட்சியர்களுடன் வெள்ளியன்று (மே 21) தமிழக அரசின் தலைமைச் செயலாளர் சென்னை, தலைமைச் செயலகத்தில் காணொலி காட்சி மூலம் ஆலோசனை மேற்கொண்டார்.இதில், கடந்த 10 நாட்களில் தொற்றுப் பரவல் விகிதம், மேற்கொள்ளப்பட்ட தடுப்பு நடவடிக்கைகள், ஆக்சிஜன் படுக்கை வசதிகள் உள்ளிட்ட பிற மருத்துவ தேவைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப் படுகிறது.

;