tamilnadu

img

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 16 ஆயிரத்தை தாண்டியது...

சென்னை:
தமிழகத்தில் புதனன்று மேலும் 16,665 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய் யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சகம் புதனன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழகத்தில் புதனன்று புதிதாக 16,665 பேருக்கு கொரோனா தொற்றுஉறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது. இதன்மூலம் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 11,30,167 ஆக அதிகரித்துள்ளது.

புதனன்று மட்டும் கொரோனாவுக்கு அரசு மருத்துவமனையில் 51 பேரும், தனியார் மருத்துவமனையில் 47 பேரும் என 98பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் இதுவரை 13 ஆயிரத்து 826 பேர் கொரோனா நோய் தொற்றால் உயிரிழந்துள்ளனர்.மேலும் 15,114 பேர் கொரோனா சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 10,06,033 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் தற்போது 1,10,308 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.அனைத்து மாவட்டங்களிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் புதனன்று அதிகபட்சமாக சென்னையில் 4,764 பேரும், செங்கல்பட்டில் 1,219 பேரும், கோவையில் 963 பேரும் கொரோனா பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.

;