tamilnadu

img

கடலூரில் மேலும் 8 பேருக்கு கொரோனா... கோயம்பேடு சென்று திரும்பியவர்கள்.... 

சென்னை
தமிழகத்தின் புதிய கொரோனா மையமாகச் சென்னை கோயம்பேடு சந்தை உள்ளது. அங்கு இதுவரை 100-க்கும் அதிகமானோருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், அங்குச் சென்று வரும் காய்கறி சார்ந்த தொழிலாளருக்கும் கொரோனா பரவி வருகிறது.

நேற்று கோயம்பேடு சென்று வந்த அரியலூரைச் சேர்ந்த 20-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்ட நிலையில், கோயம்பேட்டிலிருந்து கடலூர் சென்றவர்களுக்கு அம்மாவட்ட நிர்வாகம் கொரோனா பரிசோதனை செய்தது. இதில் இன்று ஒரே நாளில் 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கெனவே கோயம்பேடு சென்று வந்த 2 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியிருந்த நிலையில், கடலூர் மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் அறிவித்துள்ளார்.

இதுவரை கடலூரில் மொத்தம் 38 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.  

;