tamilnadu

img

தமிழகத்தில் புதிதாக மேலும் 6,984 பேருக்கு கொரோனா

தமிழகத்தில் இன்று புதிதாக மேலும் 6984 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 
நாடு முழுவதும் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை மிக வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் தமிழகத்திலும் தற்போது கொரோனா தொற்று பரவலின் வேகம் தொடர்ந்து அதிகரித்துள்ளது. இந்நிலையில் இன்று ஒரே நாளில் 6984 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து தமிழகத்தில் மொத்தம் 9,47,129 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 
சென்னையில் 2,482 பேருக்கும், செங்கல்பட்டில் 771 பேருக்கும், கோவையில் 504 பேருக்கும், திருவள்ளூரில் 285 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 204 பேருக்கும், திருப்பூரில் 165 பேருக்கும், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 
இந்நிலையில் இன்று 3,289 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர். இதுவரை மொத்தம் 8,84,199 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர்.  தற்போது 49,985 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  கடந்த 24 மணி நேரத்தில் 82,236 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. 

;