tamilnadu

கொரோனா: வண்டலூரில் மேலும் ஒரு சிங்கம் பலி...

சென்னை:
வண்டலூர் பூங்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த ஆண் சிங்கம் புதன்கிழமை பலியானது. இதனையடுத்து பலி எண்ணிக்கை 2ஆக உயர்ந்துள்ளது.கடந்த மே 26 ஆம் தேதி, பூங்காவின் சஃபாரி பகுதியில் பராமரிக்கப்பட்டு வரும் 5 சிங்கங்களுக்கு பசியின்மை மற்றும் சளித் தொந்தரவு ஏற்பட்டது. இதையடுத்து அங்கிருந்த கால்நடை மருத்துவக் குழுவினர், சிங்கங்களுக்கு உடனடியாக பரிசோதனையும், சிகிச்சையும் செய்தனர்.

தொடர்ந்து, 11 சிங்கங்களின் ரத்தம், சளி மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, தானுவாஸ் மற்றும் போபாலில் உள்ள உயர்பாதுகாப்பு நோய் தேசிய நிறுவனத்துக்கு (என்ஐஎச் எஸ்ஏடி) அனுப்பி வைக்கப்பட்டது.அதில் 9 சிங்கங்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், அனைத்து சிங்கங்களும் தனிமைப் படுத்தப்பட்டுள்ள சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.இந்நிலையில், சிகிச்சை பலனளிக்காமல் கடந்த வாரம் நிலா என்ற பெண் சிங்கம் உயிரிழந்த நிலையில், மேலும் ஒரு ஆண் சிங்கம் பலியாகியுள்ளது.
மேலும், கொரோனாவால் பாதிக்கப் பட்ட மீதமுள்ள சிங்கங்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

;