tamilnadu

img

தமிழகத்தில் இன்று 1,559 பேருக்கு கொரோனா பாதிப்பு 

தமிழக சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்ட தகவலின்படி, தமிழகத்தில் இன்று புதிதாக 1,559 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 26,07,206 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் இன்று 26 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 34,814 ஆக அதிகரித்துள்ளது. இன்று 1,816 பேர் கொரோனா சிகிச்சை முடிந்து வீடுதிரும்பியுள்ளனர். இதனால் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 25,54,323 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் தற்போது 18,069 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

சென்னையில் இன்று 175 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கோவையில் இன்று 216 பேருக்கும், ஈரோட்டில் 115 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

 

;