சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையின் மதிப்பை அடிப்படையாக வைத்து எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் மட்டுமின்றி சமையல் எரிவாயு சிலிண்டர் விலையையும் தீர்மானிக்கின்றன. அந்தவகையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினசரி மாற்றியமைக்கப்படுகிறது.
சென்னையில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை இன்று மேலும் ரூ.25 அதிகரித்து ரூ.835க்கு விற்பனை செய்யப்படுகிறது. சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.810-லிருந்து ரூ.835 ஆக உயர்ந்துள்ளது. கடந்த பிப்ரவரி மாதத்தில் மட்டும் ரூ.100 விலை உயர்ந்த நிலையில் மார்ச் ஒன்றாம் தேதியே மேலும் ரூ.25 அதிகரித்துள்ளது. இதையடுத்து கடந்த ஜனவரியில் ரூ.710 ஆக இருந்த சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.125 உயர்ந்து ரூ.835 ஆக அதிகரித்துள்ளது. இதனால் பொதுமக்கள் மார்ச் மாதத்தில் இன்னும் எத்தனை முறை விலையேற்றம் அறிவிக்கப்படுமோ என்ற அச்சத்தில் உள்ளனர்.
தொடர்ந்து அதிகரித்து வரும் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை சாமானிய மக்களின் வாழ்வாதாரத்தை மேலும் நெருக்கடிக்கு உள்ளாக்கி உள்ளது.