காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தனுக்கு ‘தகைசால் தமிழர்' விருதை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டிற்கும் தமிழினத்தின் வளர்ச்சிக்கும் மாபெரும் பங்காற்றியவர்களைப் பெருமைப்படுத்தும் வகையில், தகைசால் தமிழர் என்ற விருது கடந்த 2021-ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருதினை கடந்த 3 ஆண்டுகளில் சிபிஎம் கட்சியின் மூத்த தலைவர் என்.சங்கரைய்யா , சிபிஐ கட்சியின் மூத்த தலைவர் ஆர். நல்லகண்ணு மற்றும் திராவிடக் கழக தலைவர் கி.வீரமணி ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தனுக்கு இந்த ஆண்டின் ‘தகைசால் தமிழர்' விருதை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
குமரி அனந்தனுக்கு சுதந்திர தின விழாவில் ரூ.10 லட்சத்துக்கான காசோலை மற்றும் பாராட்டுச் சான்றிதழை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்குகிறார்.