tamilnadu

தீக்கதிர் முக்கிய செய்திகள்

திமுகவுடன் காங்கிரஸ் ஜனவரி 28 இல் தொகுதி பங்கீடு பேச்சு
சென்னை,ஜன.21- தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப் பாளராக நியமிக்கப்பட்டுள்ள அஜய் குமார் கடந்த 2 நாட்களாக காங்கிரஸ் நிர்வாகிகளுடன் மக்களவைத் தேர்தலை சந்திப்பது தொடர்பாக ஆலோசனை நடத்தினார். அதைத் தொடர்ந்து அஜய் குமார் செய்தியாளர்களிடம் பேசுகையில்,  “தி.மு.க.வுடன் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை வருகிற 28-ந்தேதி நடை பெறும்” என்றார்.

ஏற்கனவே இரு கட்சி களிலும் தொகுதி பங்கீட்டு பேச்சு வார்த்தை நடத்துவதற்காக குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் நடைபெறும் பேச்சுவார்த்தை முடிவுகள் காங்கிரஸ் தலைமையிடம் தெரிவிக்கப்படும். பின்னர் கட்சி தலைமை தொகுதிகளை உறுதி செய்யும் என்றார்.

கோயம்பேட்டிலிருந்தே ஆம்னி பேருந்துகள் இயக்கப்படும்
சென்னை,ஜன.21- அனைத்து ஆம்னி பேருந்துகளும் ஜனவரி 24ம் தேதிக்கு பிறகு கிளாம் பாக்கத்தில் இருந்து செயல்பட வேண் டும் என தமிழ்நாடு அரசு அறிவித்தது.  இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த ஆம்னி பேருந்து உரிமை யாளர்கள், தற்போது பேருந்து நிறுத்த  மட்டும் அனுமதி கொடுத்த நிலையில்  வேறு எந்த வசதியும் ஏற்படுத்தப்பட வில்லை.

வெளியூரிலிருந்து சுமார் 1,000 பேருந்துகள் வரும் நிலையில் 100  பேருந்துகளுக்கு மட்டும் தான் அனுமதி  கொடுக்கப்பட்டுள்ளது.  பணிகள் இன்னும் முழுமையாக முடியவில்லை. பணிகள் அனைத்தும் முடிந்து ஆம்னி பேருந்துகளுக்கு ஏற்ற வசதி ஏற்படுத்தி தந்தால் பேருந்துகளை கிளாம்பாக்கத்துக்கு மாற்றுவோம். எனவே கிளாம்பாக்கத்தில் மெட்ரோ, புறநகர் ரயில் நிலையம் வரும் வரை  இதே நிலை தான் நீடிக்கும். ஏனென்றால்,  ஜிஎஸ்டி சாலையை கடந்து கிளாம் பாக்கம் வர மக்கள் சிரமப்படுவதால் இந்த முடிவை எடுத்துள்ளோம்.

ஆம்னி  பேருந்துகளை ஜனவரி 24ம் தேதியே  கிளாம்பாக்கம் பேருந்து நிலையத் துக்கு மாற்ற வேண்டும் என்பது முடியாத காரியம். கிளாம்பாக்கம் பேருந்து நிலையத் தில் ஆம்னி பேருந்துகளை நிறுத்த போதுமான இடவசதியை தமிழ்நாடு அரசு ஏற்படுத்தித் தர வேண்டும். அதன்  பின்னரே கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்துக்கு ஆம்னி பேருந்துகளின் முழுமையான செயல்பாட்டை மாற்றுவோம்” என ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஈசிஆர் சாலையைபறவைகள் வாழிடமாக அறிவிக்க கோரிக்கை

சென்னை,ஜன,21- கிழக்கு கடற்கரை சாலையை யொட்டிய பகுதிகளை பாதுகாக்கப் ்பட்ட பறவைகள் வாழிடமாக அரசு அறிவிக்க வேண்டும் என பா.ம.க. தலை வர் அன்புமணி ராமதாஸ்  அறிக்கை வெளியிட்டுள்ளார். கிழக்குக் கடற்கரைச் சாலை பகுதிக்கு வரும் பறவைகளை பாது காக்க இனியாவது தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதற் காக கிழக்குக் கடற்கரைச் சாலை பகுதியை பாதுகாக்கப்பட்ட பறவைகள்  வாழிடமாக அறிவிக்க வேண்டும். அதுமட்டுமின்றி, வேடந்தாங் கல் பகுதியில் நடைமுறை பயன் படுத்தப்படும் அனைத்து விதிகளையும் இங்கும் நடைமுறைப்படுத்தி, அங்கு மேற்கொள்ளப்படும் ஹெலிகாப்டர் சுற்றுலா, அமைதியையும், சூழலையும் கெடுக்கும் கொண்டாட்டங்கள், ஒலிமா சுவை ஏற்படுத்தும் நிகழ்ச்சிகள் ஆகிய வற்றுக்கு தமிழக அரசு தடை விதிக்க  வேண்டும்” என அதில் தெரிவித் துள்ளார்.