tamilnadu

img

மாற்றுத்திறனாளி கிரிகெட் வீரரை பேருந்தில் ஏற்ற மறுத்த நடத்துநர் பணியிடை நீக்கம்

மாற்றுத்திறனாளி கிரிக்கெட் வீரரை பேருந்து ஏற்றாமல் அவமதித்ததற்க்காக அரசு பேருந்து நடத்துநர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

  இந்திய மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட் அணியின் கேப்டனும் மதுரையைச் சேர்ந்தவருமான சச்சின் சிவா, சென்னையில் இருந்து மதுரைக்கு வருவதற்காக நேற்று இரவு சென்னை கோயம்பேடு பேருந்து நிறுத்தத்தில் கழிப்பறை வசதியுடன் கூடிய பேருந்தில் பயணிப்பதற்காக ஏறியுள்ளார்.

அப்போது அந்த பேருந்தின் நடத்துநர் இந்த பேருந்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான அனுமதி இல்லை என கூறி பேருந்தில் ஏறக்கூடாது என அவமதிக்கும் வகையில் பேசியுள்ளார்

அப்போது சச்சின் சிவா, இதுபோன்ற பேருந்துகளில் பயணிக்க அனுமதி உள்ளது என பதிலளத்துள்ளார். அதற்கு, நடத்துநர் சிவாவிடம் முகத்தை உடைத்துவிடுவேன். எனக்கு எல்லாம் தெரியும் என கூறி மிரட்டல் விடுத்தாக கூறப்படுகிறது. அந்த வீடியோ காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் புகார் அளிக்கப்பட்டதின் அடிப்படையில் நடத்துநர் ராஜா பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.