தோழர் இராதாகிருஷ்ணன் காலமானார்
ஊத்துக்கோட்டை,ஜூன் 13- திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை வட்டத்திற்கு உட்பட்ட கொமக்கம்பேடு கிராமத்தை சேர்ந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தோழர் ஜெ.இராதாகிருஷ்ணன் (வயது 72), வியாழனன்று (ஜூன்12) காலமானார். தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தில் முன்னணி நிர்வாகியாக இருந்து பணியாற்றி யவர். கட்சியில் 25 ஆண்டுகளுக்கு மேலாக உறுப்பினராக இருந்து பல்வேறு போராட்டங்களில் கலந்து கொண்டவர். திடீரென வியாழனன்று (ஜூன் 12), கால மானார். அவரின் உடலுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம், மாநிலக்குழு உறுப்பினர் ஐ.ஆறுமுகநயினார், மாவட்டச் செயலாளர் எஸ்.கோபால், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் டி.பன்னீர்செல்வம், ஜி.சம்பத், ஏ.ஜி.கண்ணன், ஆர்.தமிழ்அரசு, மூத்த தோழர் கே.செலவராஜ், வட்டச் செயலாளர் என்.கங்காதரன், சிபிஎம் ஒன்றிய முன்னாள் கவுன்சிலர் பி.ரவி, விவசாயிகள் சங்கத்தின் வட்டத் தலைவர் எம்.பழனி உள்ளிட்டு பலர் அஞ்சலி செலுத்தினர். அவரது உடல் சொந்த ஊரான கொமக்கம்பேடு கிராமாத்தில் உள்ள மயானத்தில் வெள்ளியன்று தகனம் செய்யப்பட்டது.