tamilnadu

img

தோழர் பீட்டர் இமானுவேல் காலமானார்...

சென்னை:
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநில மைய அலுவலக பொறுப்பாளர் பீட்டர் இமானுவேல் சனிக் கிழமையன்று (ஜூன் 5) காலமானார். அவருக்கு வயது 71.

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் வடசென்னை மாவட்ட  பொருளாளராகவும், தமிழ்நாடு வருவாய்த் துறை  அலுவலர் சங்கத்தின் பொருளாளராகவும் பணியாற்றியவர் பீட்டர் இமானுவேல். பணி ஓய்விற்கு பின் அரசு ஊழியர் சங்கத்தின் மாநில மைய அலுவலகத் தின் முழுநேர பொறுப்பாளராக கடந்த 15 ஆண்டுகளாக செயலாற்றி வந்தார். 

அண்மைக்காலமாக உடல் நலிவுற்றிருந்த அவர் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி  காலமானார். மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநிலத் தலைவர் மு.அன்பரசு, சங்கக் கொடியை போர்த்தி அஞ்சலி செலுத்தினார்.அரசு ஊழியர் சங்கத்தின் வடசென்னை மாவட்டச் செயலாளர் ம.அந்தோணி சாமி, சென்னை மாநகராட்சி செங்கொடி சங்கத்தின் பொதுச் செயலாளர் பி. சீனிவாசுலு, தமிழ்நாடு கருவூல கணக்குத்துறை அலுவலர் சங்க முன்னாள் நிர்வாகி மாடசாமி, அரசு ஊழியர் சங்க வடசென்னை மாவட்ட முன்னாள் செயலாளர் ஜெ.பட்டாபி, தோழர் இமானு வேலின் சகோதரர் பிரபு, சிஐடியு சார்பில் சுரேஷ் உள்ளிட்டோர் அவரது உடலுக்கு மலர் அஞ் சலி செலுத்தினர். இதனைத் தொடர்ந்து அன்னாரது உடல் கீழ்பாக்கம் கல்லறையில் அடக்கம் செய்யப் பட்டது. 

;