தோழர் கஜேந்திரன் காலமானார்
சென்னை, ஜூன் 17- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தோழர் கஜேந்திரன் (72) செவ்வாயன்று (ஜூன் 17) காலமானார். அவருக்கு வயது 72. இளம் பருவத்திலேயே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்பால்ஈர்க்கப்பட்ட அவர், 1980 ஆம் ஆண்டில் கட்சியில் இணைந்தார். பகுதி மக்களின் நலனுக்காக நடைபெற்ற பெரும்பாலான போராட்டங்களில் பங்கேற்றார். தனது இறுதி மூச்சு வரை எளிய மக்களுக்காக குரல் கொடுத்தார். உடல்நலக்குறைவால் காலமான தோழர் கஜேந்திரனின் உடல் மணலி காந்தி தெருவில் உள்ள இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. மாநிலக்குழு உறுப்பினர் எல்.சுந்தரராஜன், செயற்குழு உறுப்பினர்கள் எஸ்.ராணி, எஸ்.பாக்கியலட்சுமி, இரா.முரளி (மத்திய சென்னை), மாமன்ற உறுப்பினர் ஆர்.ஜெயராமன், பகுதிச் செயலாளர் டி.பாபு, நிர்வாகிகள் சிட்டிபாபு, பால்மற்லாறி கருணாநிதி, ரவி, நீலவேணி, பத்மநாபன், சிபிஎம், சிஐடியு, வாலிபர்சங்கத்தினர் மலரஞ்சலி செலுத்தினர். அவரது உடல் பெரிய சேக்காடு மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.