தொடர் மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிருக்கு ஏக்கருக்கு ரூ. 30 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும், விவசாய கடன்களை முழுமையாக ரத்து செய்ய வேண்டும், பயிர்க்காப்பீட்டிற்கு முழு இழப்பீடு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் கும்பகோணம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாநில பொதுச் செயலாளர் பெ.சண்முகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.