கம்யூனிஸ்ட் கட்சிகளின் 24-ஆவது சர்வதேச மாநாடு
பெய்ரூட், ஜூலை 7 - கம்யூனிஸ்ட் கட்சிகள், தொழிலாளர் கட்சிகளின் 24 ஆவது சர்வதேச மாநாடு 2024 அக்டோபர் 25-27 வரை நடைபெற உள்ளது. லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் இம்மாநாடு நடைபெற உள்ளது. தீவிர மடையும் போர், நவதாராள மயம், நவீன பாசிச சூழ லுக்கு இடையே நடை பெறும் இம்மாநாடு தொழி லாளர்களின் எதிர்கால இயக்கங்கள், திட்டங்கள் உள்ளிட்டவற்றை விவா திக்கும் வரலாற்றுச் சிறப்பு மிக்க மாநாடாக அமையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகளவில் 124 இடது சாரிக் கட்சிகள் இம்மாநா ட்டில் பங்கேற்க உள்ளன.
அதிக பணியழுத்தம்; “ரோபோ தற்கொலை”
சியோல், ஜூலை 5 - தென்கொரியாவில் அதிக பணியழுத்தத்தின் காரணமாக ரோபோ ஒன்று தற்கொலை செய்துள்ளது. இது அந்நாட்டின் முதல் ரோபோ தற்கொலை என கூறப்படுகிறது.
தென்கொரியாவின் குமி என்ற நகரின் நகர சபை அலு வலகத்தில் 2023 ஆகஸ்ட் மாதம் ரோபோ ஒன்று பணி யாளராக இணைக்கப்பட்டு அடையாள அட்டை வழங்கப் பட்டது. அந்த ரோபோவிற்கு தினமும் ஆவணங்களை பரிமாற்றம் செய்வது, நகராட்சித் திட்டஙகளை விளம்பரப்படுத்துவது மற்றும் உள்ளூர்வாசி களுக்கு தகவல்கள் வழங்கி உதவுவது உள்ளிட்ட பணிகள் கொடுக்கப்பட்டன.
இந்நிலையில் நகர சபை யின் முதல் மற்றும் இரண்டாம் தளத்திற்கு இடை யேயான படிக்கட்டுகளில் ரோபோ அதன் கட்டுப் பாட்டை இழந்து கரகர வென சுற்றி வெடித்துச் சிதறியதாக அங்கிருந்த வர்கள் தெரிவித்துள்ளனர்.
இது ‘ரோபோவின் தற்கொலை’ என்றும் ரோபோ வின் திறனுக்கு அதிகமாக பணி கொடுக்கப்பட்டதால் தான் அது செயல் இழந்து வெடித்தது என்றும், அப்படியென்றால் அது பணி சுமைதானே என்றும் மக்கள் கேள்வி எழுப்பி வரு கின்றனர்.
தீக்கதிர் செய்தி எதிரொலி சிறுமலையில் மத்திய அதிகாரிகள் ஆய்வு
திண்டுக்கல், ஜுலை 7 - திண்டுக்கல் சிறுமலை யில் சௌசௌ கொடியில் மஞ்சள் நோய் மற்றும் வெள்ளைப்புழு தாக்குதல் காரணமாக விவசாயிகள் கடும் பாதிப்படைந்துள்ள னர்.இது தொடர்பாக தீக்கதிர் நாளிதழில் செய்தி வெளியானது. இதனை யடுத்து மத்திய ஒருங்கி ணைந்த பயிர் பாதுகாப்பு மைய அதிகாரிகள் ஞாயி றன்று ஆய்வு மேற்கொண்டனர்.
1000 குளங்களில் ஒரு சொட்டு கூட தண்ணீர் இல்லை
திருநெல்வேலி ஜூலை 7- நெல்லை, தென்காசி மாவட்டங்களில் அணை பகுதிகளில் மட்டும் அதிக அளவு தென்மேற்கு பருவ மழை பொழிந்துள்ளது. பிற பகுதிகளில் போதிய அளவு மழை பெய்யாததால் பெரு ம்பாலான குளங்கள் வறண்டு போய் உள்ளன.
நெல்லை மாவட்டத்தில் சுமார் 1200 குளங்கள் இரு க்கும் நிலையில், அதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குளங்களில் ஒரு சொட்டுத் தண்ணீர் கூட இல்லை. குளங் கள் அனைத்தும் வறண்டு போய் வெடிப்பு விழுந்து கிடக்கின்றன. சுமார் 50 குளங்களில் தான் ஓரளவு தண்ணீர் இருக்கிறது. மீத முள்ள குளங்களில் பெயரள வுக்கு தண்ணீர் கிடக்கிறது. அந்த தண்ணீரும் தற்போது சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கத்தால் வேகமாக குறைந்து வருகிறது.
இதன் காரணமாக கால்நடைகளுக்கு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் அபா யம் உருவாகி உள்ளது. தென்மேற்கு பருவமழை பெய்யும் காலம் இன்னும் 2 மாதங்கள் வரை இருந்தா லும், தற்போது கோடையை மிஞ்சும் அளவுக்கு வெயில் அடிப்பதால் நீர் நிலை களில் தண்ணீர் வேகமாக வறண்டுவிட்டது.
மேய்ச்சலுக்குச் செல்லும் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகள் குளங்களில் தண்ணீர் இல்லாததால் அவை திண்டாடுகின்றன. ஒரு சில குளங்களில் குறைந்த அளவு தண்ணீர் இருப்ப தால் மேய்ச்சலுக்கு செல் லும் கால்நடைகள் அந்த தண்ணீரில் மணிக்கண க்கில் இளைப்பாறுகின்றன.