சென்னை, மே 3 - தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு முடிந்து வாக்குப் பெட்டிகள் வைப்பறையில் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. ஜூன் 4 அன்று வாக்குகள் எண்ணப்பட உள்ளன. இதற்கிடையில், தமிழகத்தில் தேர்தல் செலவுக்காக கொடுத்த பல கோடி ரூபாய் பணம் என்ன ஆனது? என்று கட்சியினரிடம் பாஜக தலைமை விசாரணையில் இறங்கியுள்ளது.
தமிழகத்தில் பாஜக வேட்பாளர்கள் போட்டி யிட்ட தொகுதிகள் ஏ,பி,சி என்று 3 பிரிவாக பிரிக்கப்பட்டிருந்தன. இதில் ‘ஏ’ பிரிவில் தென் சென்னை, மத்திய சென்னை, கோவை, நீலகிரி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, விருது நகர், மதுரை ஆகிய தொகுதிகள் இடம்பெற்று இருந்தன. வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் என ‘கண்டறியப்பட்ட’ இந்த தொகுதிகளில் தாராள மாக செலவுகளுக்கு கட்சி சார்பில் பணம் கொடுக்கப்பட்டது. பெரும்பாலும் வேட்பாளர் கள் கைகளில் ஒப்படைக்கப்பட்ட பணம்,
அவர்கள் மூலம் பொறுப்பாளர்களிடம் கொடுக்கப்பட்டு பூத் வரை செலவு செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் சில தொகுதிகளில் வேட்பா ளர்கள் கொடுத்த பணம் கீழ் மட்டம் வரை செல்ல வில்லை. சில தொகுதிகளில் வேட்பாளர்கள் கொடுத்த பணம் முழுவதையும் செலவு செய்ய வில்லை.
சில தொகுதிகளில் பொறுப்பாளர்கள் மொத்தமாக சுட்டு விட்டார்கள் என்று ஏகப்பட்ட புகார்கள் வந்துள்ளன. பெருமளவு பணத்தை சுருட்டிய சில முக்கிய நிர்வாகிகள் மீது தில்லி மேலிடத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது. இதனால் மேலிடத் தலைவர்கள் கடும் அதிர்ச்சியில் இருக்கின்றனர். இதையடுத்து ஒவ்வொரு தொகுதியிலும் மையக்குழு கூட்டத்தை கூட்டி வரவு - செலவு கணக்குகளை கேட்டு அறிக்கை தயாரித்து மேலிடத்துக்கு அனுப்பும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
தென் சென்னையில் மையக்குழு கூட்டம் நடத்தி கணக்கு கேட்கப்பட்டுள்ளது. மத்திய சென்னை, திருவள்ளூர் தொகுதிகளில் இன்னும் கூட்டம் கூட்டவில்லை. காணாமல் போன கோடிகளை தேடும் படலம் நடப்பதாக பாஜகவுக்குள் பேசப்படுகிறது.