tamilnadu

img

சென்னை, மதுரை, கோவைக்கு வரும் அல்ட்ரா மாடல் தாழ்தள பேருந்துகள்

சென்னை, ஜூன் 27- சென்னை, மதுரை மற்றும் கோவை யில் அறிமுகப்படுத்த அசோக் லேலண்ட் நிறுவனத்திடம் இருந்து தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை வாங்கியுள்ள அல்ட்ரா மாடல் புதிய தாழ்தள பேருந்துகளின் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

தமிழ்நாடு முழுவதும் இயக்கப்படும் அரசு பேருந்துகளில் பாதிக்கும் அதிகமான பேருந்துகள் பழமையான உள்ளது. இந்நிலையில் அவ்வப்போது அரசு பேருந்துகளின் இருக்கைகள் உடைந்து, ஜன்னல்கள் சேதம் அடைந்து, படிக்கட்டுகள் இல்லா மல், மழை பெய்தால் மேற்கூரை ஒழுகும் நிலை இருப்பது போன்ற குற்றச்சாட்டுக்களை சமூக வலை தளங்களில் பயணிகளும், பொதுமக்க ளும் பதிவிடுவதை காண முடிகிறது.

அது மட்டுமல்லாமல் சமீபத்தில் இருக்கை கழன்று அரசு பேருந்து ஓட்டுநர் தூக்கி வீசப்பட்ட சம்பவம், பேருந்தில் இருந்து சக்கரம் கழன்று விபத்துக்குள்ளான செய்திகள் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் புதிய பேருந்துகளை வாங்க வேண்டும் என பொதுமக்கள் முதல் அரசியல் கட்சித் தலை வர்கள் வரை வலியுறுத்தினர். இதை யடுத்து நடப்பாண்டில் தாக்கல் செய்யப்பட்ட தமிழ்நாடு பட்ஜெட்டில் போக்குவரத்து கழகத்திற்கு புதிதாக 3,000 பேருந்துகள் வாங்க நிதி ஒதுக்கப் பட்டது.

இந்த பேருந்துகள் சாதாரண பேருந்துகளாக இல்லாமல், மின்சாரத்தில் இயங்கும் எலக்ட்ரிக் பேருந்துகளாகவும், மாற்றுத் திறனாளிகள் மற்றும் முதியோர்கள் பயன்படுத்தும் வகையில் தாழ்தள ஏசி பேருந்துகள், ஏசி இல்லாத பேருந்துகள், தானியங்கி கதவுகள் கொண்ட பேருந்துகள் இயற்கை எரிவாயு மூலம் இயங்கும் பேருந்து கள் என நவீன வசதிகளுடன் வாங்கப்பட்டு வருகிறது. அடுத்த மாதம் முதல் இந்த பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

இதற்கான ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாக உள்ளதாக கூறப்படுகிறது. இந்த பேருந்துகள் அசோக் லேலண்ட் நிறுவனத்தில் இருந்து வாங்கப்பட்டுள்ளது. இதில் சென்னைக்கான பேருந்துகளை வாங்கும் ஏலத்தில் மூன்று ஏலதாரர் கள் தங்களது அறிக்கையை சமர்ப்பித்துள்ளனர். இதில் சென்னைக்கு 500 பேருந்துகள், 100 ஏசி பேருந்துகள் உட்பட 500 தாழ்தள மின்சார பேருந்துகள் கொள்முதல் இறுதிகட்டத்தை எட்டியுள்ளதாகக் கூறப்படுகிறது. வரும் மாதங்களில் சென்னையில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதிய வர்கள் நலன் கருதி அவர்கள் விரை வாக பயணம் செய்ய உதவியாக இருக்கும் வகையில் 1,552 தாழ்தள பேருந்துகளை சென்னை பெருநகர போக்குவரத்துக் கழகம் பெற உள்ளது.

இந்த பேருந்துகள் ஜெர்மன் அபிவிருத்தி வங்கி நிதி உதவி மூலம் வாங்கப்பட உள்ளது. சென்னை பெருநகர போக்கு வரத்து கழகம் மட்டுமல்லாது தமிழ் நாடு அரசு போக்குவரத்து கழகம் மூலம் மதுரை, கோவைக்கு தலா 100 தாழ்தள பேருந்துகள் அதே ஒப்பந்த முறையில் வாங்கப்பட உள்ளது.

முதலில் 442 பேருந்துகள் வாங்க முடிவு செய்யப்பட்ட நிலையில் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை அடுத்து தாழ்தள பேருந்து களின் எண்ணிக்கை 25 விழுக்காடு அதிகரித்து வாங்க முடிவு செய்யப் பட்டுள்ளது. இதற்காக ஜெர்மன் அபிவிருத்தி வங்கி விரைவில் அனு மதி வழங்கும் என்றும் எதிர்பார்க்கப் படுகிறது. அதன் பிறகு பேருந்துகள் வாங்கப்பட்டு பயன்பாட்டிற்கு வரும் என்றும் தகவல்கள் தெரிவிக்கிறது.

;