tamilnadu

img

தமிழ்நாட்டுக்கு அநீதி இழைக்கும் போக்கு எல்லை மீறிச் செல்கிறது! - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

தமிழ்நாட்டுக்கு அநீதி இழைக்கும் போக்கில் ஒன்றிய அரசு எல்லை மீறிச் செல்கிறது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
பி.எம்.ஸ்ரீ திட்டத்தில் இணைய மறுத்ததால், ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தின் (சமர்க்கார சிக்ச அபியான்) கீழ் 2024-25 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டுக்கு ஒன்றிய அரசு ஒதுக்கிய ரூ.2,152 கோடி நிதியை பிற மாநிலங்களுக்கு பகிர்ந்தளித்தது. இந்த நிலையில், தமிழ்நாட்டுக்கு அநீதி இழைக்கும் போக்கில் ஒன்றிய அரசு எல்லை மீறிச் செல்கிறது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் முதலமைச்சர் ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியதாவது:
“மும்மொழி கொள்கை, புதிய கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்த மறுப்பதால் தமிழ்நாட்டுக்கு ஒதுக்கப்பட்ட ரூ.2,152 கோடியை பிற மாநிலங்களுக்கு திருப்பிவிட்டு ஒன்றிய அரசு பகிரங்கமாக மிரட்டல் விடுத்துள்ளது. இது மாணவர்களை
இந்திய வரலாற்றில் இதுவரை எந்த அரசும் கல்வித்துறையில் அரசியல் பழிவாங்கல் செய்ததில்லை. தமிழ்நாட்டுக்கு 
அநீதி இழைக்கும் ஒன்றிய பாஜக அரசின் போக்கு எல்லை மீறிச் செல்கிறது.” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.