tamilnadu

img

கர்நாடக எல்லைகள் மூடல்: கேரள முதல்வர் பிரதமருக்கு கடிதம்...

திருவனந்தபுரம்:
கர்நாடக எல்லையைத் தாண்டி கேரளாவிலிருந்து பயணிகள் மற்றும் வாகனங்கள் செல்வதைத் தடுக்கும் அம்மாநில அரசின்நடவடிக்கையை  உடனடி யாக தடுக்குமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் கடிதம் அனுப்பியுள்ளார்.கர்நாடகாவின் கட்டுப்பாடு காரணமாக, மாணவர் களும் மருத்துவமனை நோக்கங்களுக்காக பயணிப்பவர்களும் பெரும் சிரமங்களை எதிர்கொள் கின்றனர். அத்தியாவசிய பொருட்களை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் கூட தடுக்கப்பட்டுள்ளன. மாநிலங்களுக்கு இடையேயான பயணத்தை கட்டுப்படுத்தக் கூடாது என்ற மத்திய அரசின் உத்தரவுக்கு எதிராக இந்த நடவடிக்கை செல்கிறது. எனவே, இது தொடர்பாக சாதகமான நடவடிக்கையை விரைவாக எடுக்க வேண்டும் என்றுமுதல்வர் தனது கடிதத்தில்பிரதமரிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

;